ஈரோடு, ஏப்.9- விபத்தில் இறந்த தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம் ஊத்துக்குளி கிராமத்தில் எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த ஏப்.7 ஆம் தேதி நள்ளிரவு வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் லாரியில் அடிப்பட்டு இறந்துள்ளார். ஆனால், ஆலை நிர்வாகம் அவரின் இறப்பை மறைக்கும் நோக்கத்துடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இறந்த தொழி லாளியின் உடலை அங்கிருந்து அகற்ற முயன்றதாகவும், ஏனைய தொழி லாளிகள் இதை தடுத்து நிறுத்திட முயன்றதாகவும் தெரியவருகிறது. மேலும், இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் வரவே, சம்பவ இடத்திற்கு சென்ற காவலர் கள் அங்கிருந்த வடமாநில தொழி லாளர்களை விரட்டியுள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், 40க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, இந்த தனியார் ஆலை யில் 400க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அங்கு அவர்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்ட அடிப்படையிலான வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என கூறப் படுகிறது. எனவே, விபத்து குறித்தும், ஆலையில் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் சட்டம் அமலாக்கம் குறித்தும் வருவாய் கோட்டாட்சியர் நிலையில் விசாரணை நடத்திட வேண்டும். விபத்தில் இறந்த தொழி லாளி குடும்பத்திற்கு உரிய நிவார ணமாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.மாரிமுத்து, எஸ்.சுப்பிர மணியன் மற்றும் சிஐடியு நிர்வாகி கள் உடனிருந்தனர்.