districts

img

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி

நாமக்கல், டிச.30- ராசிபுரம் மக்களுக்கு அடிப் படை வசதிகள் ஏற்படுத்தி தர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்களில்  வெள்ளியன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி கள் ஏற்படுத்தி தரக்கோரி நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, வடக்கு  ஒன்றிய செயலாளர் கோ.செல்வ ராசு, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பெரியசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராணி, மாதர் சங்க மாவட்ட பொரு ளாளர் கே.புஷ்பலதா, சிஐடியு தலைவர் வி.சங்கரன், சிபிஎம் கிளை செயலாளர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். ராசிபுரம் நகரில் வீடற்ற ஏழை  மக்களுக்கு இலவச வீடுகள்  வழங்க வேண்டும். பிற்படுத்தப் பட்டோர் காலனி மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க  வேண்டும். மக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ராசி புரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கிளைச் செயலாளர் சி.சண்முகம் தலைமை வகித்தார். ஆர்.கவுண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 8 மற்றும் 9 ஆவது வார்டுகளில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்களுக்கு 40 ஆண்டு களுக்கு முன்பு அரசு வழங்கிய  வீடுகள் இடிந்து விழும் நிலையில்  உள்ளது. எனவே, வீடுகளுக்கு பராமரிப்பு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம்  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச் செயலாளர் பி. காளியப்பன் தலைமை வகித்தார். இதனிடையே அப்பகுதியில் உள்ள  பொதுக்கிணற்றைச் சுற்றி சாக் கடை கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, நிதி ஒதுக்கி  ஆணை பிறப்பித்தது. ஆர்.பட்டணம் பேரூராட்சி மக்க ளுக்கு மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்  மூலம் 100 நாள் வேலை வழங்க  வேண்டும். பொதுக்கழிப்பிடங் களை சுகாதாரமாக பராமரிக்க சுகா தார பணியாளர்களின் நியமித்து, தினசரி பராமரிப்பு பணிகளை மேற் கொள்ள வேண்டும் என வலியு றுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூர் செயலாளர் கோ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி,  தோப்புக்காடு பகுதியில் சாலை,  கழிவுநீர் கால்வாய், புதிய மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். புதுப்பாளையம் பகுதி  மக்களின் மயானம் புதர் மண்டி கிடப்பதை சுத்தம் செய்து, பரா மரிக்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி புதுப் பாளையம் பேருந்து நிறுத்தம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளை செயலாளர் எம்.துரை  தலைமை வைத்தார். தொட்டியபட்டி ஊராட்சி, போயர் சமூக மக்களுக்கு மயான  வசதி, தினசரி குடிநீர் விநியோகம்  செய்ய வேண்டும் என வலியு றுத்தி வருவாய் ஆய்வாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கிளை செயலாளர் ஆர்.நடேசன் தலைமை வகித்தார்.  அளவாய்பட்டி ஊராட்சி  பகுதியில் அனைவருக்கும் சுழற்சி  முறையில் 100 நாள் வேலை வழங்க  வேண்டும். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு கல் லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ுநடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் எம். ரங்கசாமி  தலைமை வகித்தார். ராசிபுரம்  பகுதியில் நடைபெற்ற ஆர்ப் ்பாட்டங்களில் திரளானோர் பங்கேற்றனர்.