திருப்பூர், ஜூன் 8- குண்டும், குழியுமாக உள்ள திருப்பூர், தோட்டத்துப்பாளையம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலையில் படகு விடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி, இரண் டாம் மண்டலத்துக்குட்பட்டது தோட்டத்துபாளையம். இங்குள்ள மாநில நெடுஞ்சாலை வாகனங் கள் செல்வதற்கே லாயக்கற்றதாக இருக்கிறது. அன்றாடம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத் துடனே இந்த சாலையில் செல்ல வேண்டியதாக உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இச்சாலையை சரி செய்ய வேண்டும் என தொடர்ந்து மாநகராட்சியிடம் மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து சாலையை சரி செய்யாவிட்டால் படகு விடும் போராட்டம் நடத்தப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் அறிவிப்பு செய் தனர். இதன்படி வியாழனன்று மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் பி.மகாலிங்கம் தலைமையில் படகு விடும் போராட்டம் நடைபெற்றது. இதில், நெடுஞ்சாலைத் துறை வாவிபா ளையம் முதல் பூலுவட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைத்திட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. முன்னதாக, இந்த போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆ. சிகாமணி, ஆர்.மைதிலி, வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், சிஐடியு சி.ராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த படகுவிடும் நூதன போராட்டம் அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.