districts

img

திருப்பூரில் ரூ.160 கோடி சம்பள பாக்கி: 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் மோடி அரசு

திருப்பூர், மார்ச் 4-  திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்துவரும் சுமார் 65 ஆயிரம் தொழி லாளர்களுக்கு 12 வாரங்களாக சம்பளம் தரா மல் ஒன்றிய மோடி அரசு வஞ்சித்து வருகிறது.  சுமார் ரூ.160 கோடி சம்பளத் தொகையை உடனே அந்த தொழிலாளர்களுக்கு வழங்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் எஸ்.சுப்பிரம ணியன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானம் வருமாறு: திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யக்கூடிய பல ஆயிரக்கணக் கான தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு  சம்பளம் தராமல் பல வாரங்களாக நிறுத்தி  வைத்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் இந்த தொழிலாளர்கள் சம்பள பாக்கியை உடனே வழங்கக் கோரி  போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து  90 ஆயிரம் தொழிலாளர்கள் நூறு நாள் வேலை திட்டத்திற்கான வேலை அட்டை வைத்திருக்கின்றனர். இவர்களில் ஏறத்தாழ 65 ஆயிரம் பேர் தற்போது இத்திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். வறட்சிக் காலத்தில் விவசாயிகளும் இத்திட்டத்தில் வேலை செய்யும் நிலை உள்ளது. தற் போது வறட்சி தலை தூக்கும் நிலையில் பெரும்பாலானோர் இந்த நூறு நாள் வேலை  திட்டத்தை நம்பியுள்ளனர். எனினும் நூறு நாள் வேலை திட்டத் தொழி லாளர்களுக்கு வேலை செய்த நாட்க ளுக்கு உடனடியாக சம்பளம் தராமல் ஒன்றிய  மோடி அரசு கால தாமதம் செய்து வருகிறது.  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இத்திட் டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் பங் கேற்ற வேலை நாள், வேலை அளவு ஆகிய வற்றைக் கணக்கிட்டு சம்பளத் தொகையைத் தர வேண்டிய விபரத்தையும் உடனடியாக ஆன்லைன் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி விட்டதாகத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு நேரடியாக தொழிலாளர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய சம்பளப் பணத்தை ஏறத்தாழ 12  வாரங்கள் வரை அனுப்பாமல் நிறுத்தி வைத் திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இத்திட் டத்தில் வேலை செய்திருக்கும் சுமார் 65 ஆயி ரம் தொழிலாளர்களுக்கு 12 வாரங்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி மட்டும் ரூ. 160  கோடிக்கு மேல் தராமல் ஒன்றிய அரசு அநியா யமாக வஞ்சித்து வருகிறது. செய்த வேலைக் கான சம்பளம் விடுவிக்கப்படாத நிலையில்,  ஊரக வளர்ச்சித் துறை மூலம் புதிய வேலை களைத் தொடங்குவதற்கும் தயங்கும் நிலை  உள்ளது. இதுவும் 1 லட்சத்து 12 ஆயிரம் கிரா மப்புறத் தொழிலாளர்களுக்கு அடுத்த அடி யாக உள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் தொழில் பாதிப்பு போன்ற காரணங்களால் கிராமப்புற உழைக் கும் மக்கள் மிகக்கடுமையான நெருக்க டியைச் சந்தித்து வருகின்றனர். இடதுசாரி கள் ஆதரவுடன் செயல்பட்ட ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான்,  பட்டினிக் கொடுமையைத் தடுக்கும் நோக்கத் தில் நூறு நாள் வேலை சட்டம் நிறைவேற் றப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை சிதைத்து சீர்குலைக்கும் நோக்கத்தில் ஒன் றிய அரசு செயல்படுகிறது. கடும் வறட்சியும் தலை தூக்கும் சிக்க லான நிலையில், கிராமப்புறத் தொழிலா ளர்களுக்கு உரிய சம்பள பாக்கியை ஒன்றிய  அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இத் திட்டத்தில் அடுத்தக்கட்ட புதிய வேலைக ளைத் தொடர்ந்து செய்யவும் உத்தரவாதப் படுத்த வேண்டும். இத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத் தொகையை ஒன்றிய அரசு  உடனடியாக வழங்குவதற்கு மாநில அரசும்  தொடர் கவனம் செலுத்தி வலியுறுத்திக் கேட் டுப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற் குழு கேட்டுக் கொண்டுள்ளது.