திருப்பூர் டிச.18 - திருப்பூர் மாவட்டத்தில், தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்ப வங்களை, காவல்துறை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 1, 9 மற்றும் 15 ஆவது வார்டு பகுதிகளில் கொலை, கொள்ளை என்று தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடை பெற்று வருகிறது. மேலும், கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை நடைபெறுகிறது. இத னால், பள்ளி குழந்தைகள், பெண் கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், வெங்க மேடு வி.பி.சிந்தன் நகர் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயிலில் சனியன்று சுப்பிரமணி என்பவர் படு கொலை செய்யப்பட்டார். இது போன்ற குற்றங்கள் நடைபெறுவது, அப்பகுதி மக்க ளிடையே பெரும் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத் தியுள்ளது. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் உரிய கண்காணிப்பு மற்றும் ரோந்து உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வெங்கமேடு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வெங்க மேடு பி கிளைச் செயலாளர் காளீஸ் வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் கிளைச் செயலாளர்கள் ஆர்.என்.ரத்தின சாமி, பாலசுப்பிரமணியம், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ரேவந்த் ஆகியோர் கண்டன உரையாற் றினர். இதில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், கட்சி யின் ஒன்றிய செயலாளர் ஆர். களியப்பன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.