districts

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் வெளியுறவு கொள்கைக்கு எதிரானதா?

திருப்பூர், அக்.25 – பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு  போர் நடத்தும் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி னால் அது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என கூறி அனுமதி மறுத்துள்ள திருப்பூர் மாவட்ட காவல் துறைக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் புதன்கிழமை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் அரசு தொடர்ந்து பேரழிவுத் தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை இந்திய அரசு வழங்கி வருகிறது. மேலும் அண்டை நாடுகளான ஜோர்டான், ஈரான் போன்ற நாடுகளையும் பாலஸ் தீன மக்களுக்கு உதவி செய்யுமாறு கூறி  வருகிறது.  இந்நிலையில் இஸ்ரேல் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய முழுவதும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப் பாட்டம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகு தியாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட் டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மா னிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்க ளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்து வது, இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்று கூறி  ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள் ளார். இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதர வாக உள்ள நிலையில், போரை நிறுத்த  வலியுறுத்தி நடத்தும் ஆர்ப்பாட்டம், எப் படி நம் நாட்டின் வெளியுறவுக் கொள் கைக்கு எதிரானது என்பதை காவல் கண் காணிப்பாளர் தெளிவுபடுத்த வேண் டும். மேலும் இது அரசின் நிலைபாட் டுக்கு எதிரானதாக திருப்பூர் மாவட்ட காவல் துறையின் அணுகுமுறை உள் ளது என சுட்டிக்காட்டுகிறோம். ஜனநாயக முறைப்படி நடத்தப்ப டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப் பது அடிப்படை உரிமையை மறுக்கும்  செயல் என்பதால் காவல் துறையின் நட வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.