கோவை, மார்ச் 27- தள்ளுவண்டி அமைத்து பிழைப்பு நடத்தும் மாற்றுத்திற னாளியின் கடையை உடைத்து சேதப்படுத்திய பொதுப்பணித் துறையின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா பகுதியில் சாலையோர கடைகளும், ஆழி யார் அணை பூங்கா எதிரில் பொதுப் பணித்துறை சொந்தமான கடை கள் 15க்கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளது. இந்நிலையில், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் லீலா, உதவி பொறியாளர் அக்பர் அலி உத்தரவின் பேரில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சாலையோர கடைகளை அப்புறப்படுத்தி உள்ள னர். 45 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்திற்கு எவ்வித இடை யூறும் இன்றி சாலையோர கடை கள் இப்பகுதி மக்கள் நடத்தி வரு கின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வா தாரமே இந்த கடைகள்தான் என்கிற நிலையில், மாற்றுத்திறனாளி ஒரு வரும் இங்கு தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கோட்டூர் பேரூராட்சியில் 2014 அடையாள அட்டையையும் பெற் றுள்ளார்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள், போக்கிரித்தன மாக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கடையை பெயர்த்தும், அடித்து நொறுக்கி சேதப்படுத் தினர். ஏழை, எளிய மக்களின் வாழ் வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்து வதே அதிகாரிகளுக்கு வழக்கமாகி போனது. சம்பவம் நடந்து நாளது தேதிவரையில் பாதிக்கப்பட்டவர் களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து, கடைகளை இடித்த பொதுப்பணித்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிக்கப்பட்ட கடை உரி மையாளரான மாற்றுதிறனாளிக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு அனுமதியில்லை என கூறி மார்க் சிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப் பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு ஆனைமலை ஒன்றியக் குழு செயலாளர் வி.எஸ்.பரமசிவம் தலைமை ஏற்றார். இதில், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி, மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம், விவ சாய தொழிலாளர் சங்க பொள் ளாச்சி தாலுகா செயலாளர் கே. பட்டீஸ்வரமூர்த்தி, சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.தங்க வேல், புவனேஸ்வரி, ஏ.முத்துசாமி மற்றும் மழைவாழ் மக்கள் சங்க ஆனைமலை தாலுகா தலைவர் கே.மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.