districts

img

இடையூறு ஏற்படுத்தும் மதுபான கடை

சேலம், டிச.29- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம்  புது ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், புது ரோடு பகுதி யில் சேலம் இரும்பாலை செல்லும்  சாலை மற்றும் அரியாக்கவுண்டம் பட்டி சாலையில் அரசு மதுபான  கடை செயல்பட்டு வருகிறது. முக்கிய  ஜங்ஷனாக செயல்படும் இப்பகுதி யில் அரசு மதுபானக்கடை செயல்படு வதால் பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து  தரப்பு மக்களுக்கும், மதுப்பிரியர் களால் தொடர்ந்து தொந்தரவு ஏற் பட்டு வருகிறது. எனவே, புது ரோடு  பகுதியில் செயல்பட்டு வரும் அரசு  மதுபான கடையை அகற்ற வேண்டும். மதுபானக்கடையை சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மதுபான சந்துக்கடைகளை நடத்தி  வரும் சமூக விரோதிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புது ரோடு பகுதியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு  மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமை வகித்தார். இதில், சிபிஎம்  மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, சேலம் தாலுகா செய லாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. பாலகிருஷ்ணன், டி.பரமேஸ்வரி, சேலம் தாலுகா மற்றும் மேற்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அரசு மது பான கடை நிர்வாக வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், காவல் உயர்  அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சம் பந்தப்பட்ட கடையை மூட 5 நாட் களுக்குள் நடவடிக்கை எடுக்கப் படும். சந்து கடைகளை கண் காணித்து குற்ற செயலில் ஈடுபடுப வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து கோரிக் கைகள் அடங்கிய மனுவை மது பான கடை நிர்வாக வட்டாட்சியரிடம்  அளிக்கப்பட்டது.