districts

பள்ளி மாணவிக்கு திருமணம்: பெற்றோர் உட்பட 4 பேர் கைது

உதகை, அக்.23- பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற் றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குன்னூரை அடுத்த பவானி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர்  முகேஷ் (30). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி  மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற் றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதன்பின்னர் திருச்சி  பகுதியை சேர்ந்த கிருபாகரன் (24) என்ற வாலிபருக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணம் நடத்தி யுள்ளனர். இந்நிலையில் மாணவி, திருச்சியில் இருந்து குன்னூர் வந்து காதலன் முகேஷ் வீட்டில் தங்கியுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதன்பின்னர் குன்னூர் கொலக்கொம்பை  காவல் துறை யினர் மாணவியை மீட்டு திருச்சியிலுள்ள காப்பகத்தில் ஒப்ப டைத்தனர்.  இதையடுத்து மாணவிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக குழந்தை திருமணம் தடுப்பு சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவியின் பெற்றோரை யும்,  மாணவியை கடத்தி சென்ற முகேஷ், திருமணம் செய்த  கிருபாகரன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் குழந்தை திரும ணம் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர்.

;