districts

img

பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை - தாலிக்கு தங்கம்

திருப்பூர், ஜன.12-  திருப்பூரில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பயனா ளிகளுக்கு  தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகள் வழங் கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பயனாளி களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங் கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் தாலிக்கான தங்கத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் அதிகாரிகள் கலந்து  கொண்டனர். அதேபோல், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு  தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப் பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு 150 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும்  திருமண நிதி உதவிகளை வழங்கினார்.  இதில் வரு வாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், தி.மு.க. மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி. நாகராஜ், தினேஷ்குமார், இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், திலக்ராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.