கோவை, ஜூலை 11– குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் பல ஆண் டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர் களை விடுதலை செய்வதே தீர்வு என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழ கம் சார்பில் கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு, தமுமுக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு முழு வதும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நேரிட்ட காலங்களில், சந்தேகத்தின் பெயரில் இஸ் லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர் கள் சிறையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார் கள். இவர்கள் மீது எந்த ஆதாரங்களும் நிரூ பிக்கப்படவில்லை. திமுக தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டதை போல 37 குற்றமற்ற இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இந்த முற்றுகை போராட்டத் தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், ஒன்றிய மோடி அரசும், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது.
பல்வேறு குற்ற சம்பவங்களில் பழி சுமத்தி வழக்குகளை தொடுத்து சிறையில் அடைக் கின்றன. குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமி யர்கள், தங்களுடைய குடும்பங்களை பிரிந்து தண்டனை அனுபவிக்கின்ற சூழலில் அவர்களுக்கு நீண்டகால பிணை கூட வழங் கப்படுவது இல்லை. தமிழக அரசு, முறை யான விசாரணை மேற்கொண்டு குற்றம் நிரூ பிக்கப்படாதவர்களை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும், என்றார். இவ்வியக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன், தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன், மனிதநேய மக் கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பா. அப்துல் சமது எம்எல்ஏ, தமுமுகவின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜே. ஹாஜா கனி ஆகியோர் உரையாற்றினர். முடி வில், கோவை அக்பர் அலி நன்றி கூறினார். இப்போராட்டத்தில், திரளானோர் பங்கேற்ற னர்.