திருப்பூர், ஜன.19 – திருப்பூர் மாநகரில் ஊட்டச்சத்து குறைபா டுள்ள குழந்தைகள் எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் இதர கிராமப்புறங்களில் இருப் பதை விட மிக அதிகமாக இருக்கிறது. ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மேற் கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந் துள்ளது. ஒன்றிய அரசின் மகளிர் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு அமைச்சரகத்தின் கீழ் செயல் படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்த மாவட்டத்தின் 14 ஒன் றியங்களிலும் 2 வயது முதல் 6 வயது வரை யுள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, இதில் திருப்பூர் மாவட்டத்தில் 2 முதல் 6 வய துள்ள குழந்தைகள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 456 பேரில் 1 லட்சத்து 40 குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 416 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் மாநகரில் மட்டும் 2 ஆயி ரத்து 485 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபா டுள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மாவட்டத்தின் பிற ஒன்றியங்களுடன் ஒப்பிடும் போது திருப்பூர் நகரப் பகுதியில் இது 16.40 சதவிகிதமாக உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, திருப்பூர் மாநகரில் அங்கன் வாடி மையங்கள் சுகாதாரமற்ற இடங்களில் அமைந்திருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயங்குகின்றனர். அத்துடன் சுற்றிலும் கழிவுநீர் சாக்கடை, குப்பை கொட்டப்படும் இடத்தில் இந்த மையங்கள் இருக்கும் நிலையில், இங்கு வரக்கூடிய குழந்தைகளும் காய்ச்சல் உள் ளிட்ட நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி அடிக் கடி விடுப்பு எடுக்கும் நிலையும் உள்ளது என்று தெரிவித்தனர். அங்கன்வாடி மையங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் இதை உறுதிப்படுத் தினர். திருப்பூர் நகரில் ஏராளமான இடங்க ளில் இந்த மையங்கள் சுகாதாரமற்ற நிலை யில்தான் செயல்படுகின்றன. அருகிலேயே குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதும்,
கொசு, பூச்சித் தொல்லையும் இருக்கிறது. கழிவுநீர் சாக்கடை செல்லக்கூடிய பகுதி யாகவும் உள்ளது. எனினும் இப்பி ரச்சனைகளை நிர்வாகத்திடம் தெரிவித்து சுகாதாரமான இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டாலும் உரிய தீர்வு கிடைப்ப தில்லை என்று தெரிவித்தனர். அத்துடன் திருப்பூரைப் பொருத்தவரை மிகப்பெரும்பான்மையானோர் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய வர்களாக உள்ளனர். அங்கன்வாடி மையங்க ளில் தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரப் பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்க ளின் வீட்டுக் குழந்தைகள் அதிகளவு அனுப்பி வைக்கப்படுகின்றனர். திருப்பூரில் காலை 8 மணிக்குள்ளாக கிளம்பி பனியன் கம்பெனிகளுக்குச் சென்று விட்டு இரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்பக் கூடியவர்களாக தொழிலாளர்களின் வேலைத்தன்மை அமைந்திருக்கிறது. இதனால் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உணவு அளித்து பராமரிக்கக் கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. இத னால் குழந்தைகள் கவனிக்கப்படாமல் ஊட் டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக் கும் நிலை அதிகமாக உள்ளது. திருப்பூரில் தொழிலாளர்களின் வேலை நேரம் உள்ளிட்ட பணிச்சூழலை ஒழுங்குபடுத் துவது அவசியமாகும். அதேபோல் அங் கன்வாடி மையங்களின் நிலை குறித்து முழு மையாக ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பு கவ னம் செலுத்தி சுகாதாரமான இடங்களில் அங் கன்வாடி மையங்கள் செயல்படுவதும், அதை தொடர்ச்சியாக தூய்மையாகப் பராம ரிப்பதும் அவசியமாகும் என்று அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் கூறுகின்ற னர்.