districts

img

உடுமலை வட்டாரத்தில் மக்காசோளம் விளைச்சல் பாதிப்பு:  நிவாரணம் தர விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, மார்ச் 19- பருவமழை இல்லாமல் போனதால் மக் காச்சோளம் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், உரம் மற்றும் பூச்சிகளை கட் டுப்படுத்த கூடுதல் செலவுகளை செய்த மக் காச்சோள விவசாயிகளுக்கு பெரும் இழப் பாக தற்பொழுது விலை வீழ்ச்சியும் ஏற்பட்டு  கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை சுற்று வட்டாரத்தில் விவசாயிகளின்  முக்கிய சாகுபடி பயிராக மக்காச்சோளம் உள்ளது. கோழி மற்றும் மாட்டு தீவனங்களின்  தேவை அதிகரித்தை தொடர்ந்து தீவனங்கள்  தயாரிக்கும் முக்கிய மூலப்பொருளான மக் காச்சோளத்தின் தேவையும் அதிகரித்துள் ளது. உடுமலை சுற்றுவட்டாரத்தில் பெரும்பா லான விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறையா வது மக்காச்சோளப் பயிரை சாகுபடி செய்து  வருகின்றனர். தற்சமயம் பல ஆயிரக்கணக் கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய் யப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று  வருகிறது. கடந்த மாதம் 100 கிலோ மூட்டை  2500 ரூபாய்க்கு விற்பனையானது ஆனால் அறுவடை துவங்கிய பிறகு 200 முதல் 300 ரூபாய் வரை மூட்டைக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த  பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட் டத்தில் போதிய நீர் கிடைக்கவில்லை மேலும்  படைப்புழுவின் தாக்குதல் அதிகரித்து பயிர் கள் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூடுதலாக மருந்துகள் அடிக்கப்பட்டு புழுக் கள் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த  புழுக்களின் பாதிப்பு தற்பொழுது அறுவடை யில் எதிரொலித்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 35  மூட்டை விளைச்சல் தர வேண்டிய மக்காச் சோளம் தற்பொழுது 18 முதல் 20 மூட்டை வரை  மட்டுமே விளைந்துள்ளது. மேலும் மக்காச்சோள கருதுகள் அனைத் தும் சுருங்கியும் சிறுத்தும் போய்விட்டது இத னால் பல்வேறு இன்னல்களை மக்காச்சோள  விவசாயிகள் சந்தித்து வருகின்றனர் முதலில்  படைப்புழுத் தாக்குதல் இரண்டாவது நீர்  பற்றாக்குறை, மூன்றாவது மகசூல் பாதிப்பு,  நான்காவது விலை சரிவு என நான்கு திசை யிலும் மக்காச்சோள விவசாயிகள் இந்த  ஆண்டு பாதிப்பை சந்தித்து வருகின்றனர் எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு உரிய இழப்பீடு அல்லது உதவித் தொகையை வழங்க வேண்டும் என இப்பகுதி  மக்காச்சோள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே கடந்த மாதம் நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்திலும் மக் காச்சோள சாகுபடி பாதிப்பு, விலை வீழ்ச்சி குறித்து விவசாயிகள் தெரிவித்தனர். எனி னும் அரசு இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது மக்காச்சோள விலையை நிர்ணயித்து,விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்காச்சோள விவ சாயிகள் எதிர்பார்க்கின்றனர்.