districts

img

மாகத்மா காந்தி நினைவு தினம் வாலிபர் சங்க தெருமுனைக் கூட்டம்

கோவை, ஜன.31-  தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76ஆம் ஆண்டு  நினைவு நாள் செவ்வாயன்று நாடு முழுவதும் அனுச ரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இடது சாரி இயக்கங்கள் சார்பில் மகாத்மா காந்தியின் உருவப் படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நினைவு நாள் தெருமுனை  பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  அந்த வகையில், கோவை மாவட்டம் அன்னூரில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கரீம், வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராஜா, முன் னாள் மாவட்டத் தலைவர் மணிகண்டன், நகரச் செயலா ளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று, மேற்கு நகரக்குழு, வடக்கு நகரக்குழு,  சூலூர், இருகூர் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் நடைபெற் றது. அதில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் கார்த்திக், மாவட்டச் செயலாளர் அர்ஜுன், மாவட்டத் தலைவர் விவேகா னந்தன், மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் நிசார், கிருபாகரன், முன்னாள்  மாவட்டச் செயலாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலு காக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தமுதீஒமு தாலுகாச் செய லாளர் சுப்பிரமணி உள்ளிட்ட தாலுகா நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.