districts

img

மகாத்மா காந்தி பிறந்தநாள்: மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

ஈரோடு, அக்.2- மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திங்களன்று பல்வேறு அமைப்பினர் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக தேசப் பிதா மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு, திங்களன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு மாவட்ட துணைத்தலைவர் டி.சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகமயன், சிறுபான்மை மக் கள் நலக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், சசி சேவி யர் உட்பட பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். இதே போல, கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி தலை மையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. அந்தியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலர் கீதா, ஏ.ஹாத்திம்தாய், ஆதம்பாய், தண்டபானி, ஆர்.முருகேசன், சார்லஸ்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவ ரது உருவச்சிலைக்கு மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். இதேபோன்று, தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் பாலர் பூங்கா சார்பில், சேலத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை யும், இந்திய இறையாண்மையையும், அரசியல் சாசனத்தை யும் பாதுகாக்க,  மதவெறி, சாதிவெறி விரட்ட உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கே.ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், சேக் முகமது, டோம்னிக் சேவி யர், வெங்கடேஷ், கே.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

கோவை

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், சாய்பாபா காலனியில் உள்ள தனியார் அரங்கில் இந்திய நட்புறவுக் கழகம் மற்றும் பல்சமய நல்லுறவு அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து காந்தியின் சிந்தனைகளை செயலாக்க உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், அனைவரும் காந்தி யடிகளின் முகமூடி அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட னர். இந்நிகழ்வில் திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா  ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் ஆறுமுகம், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை ரயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள அவரது சிலைக்கு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் யு.கே.சிவஞானம், திரா விட தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, தபெதிக, திராவிட சுயமரியாதை கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமுஎகச, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட் டம், பூங்கா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிசார் தலைமை வகித்தார். அப்போது, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரி யாதை செலுத்தப்பட்டது. இதன்பின் “கல்வியை பாதுகாப் போம், தேசத்தை பாதுகாப்போம், மத நல்லிணக்கத்தை பேணுவோம்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில்  சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ரம்யா, மு.தங்கராஜ், பவித்ரன், அருண் குமார், மாவட்ட நிர்வாகிகள் குரு, தீபா, நர்மதா, தனுஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் சிறுபான்மையினர் நலக்குழு சார்பில் காந்தி ஜெயந்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.அசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.அசோகன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

தருமபுரி

தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை சார்பில். மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா முத்து இல்லத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவர் வெ.மாதன் தலைமை வகித்தார். அப்போது, மகாத்மா காந்தியின் படத்தைத் திறந்து வைத்து தகடூர் புத்தகத் பேரவை செயலாளர் இரா.செந்தில் சிறப்புரையாற்றினார். இதில் அன்னை கஸ்தூரிபா காந்தி அறக் கட்டளை தலைவர் செ.சக்திவேல், செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பானு பூமணி, நகர்மன்ற உறுப்பினர்  ஏ.மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைய டுத்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டன. முடிவில், அறக்கட்டளைப் பொருளாளர் என்.கந்தசாமி நன்றி கூறினார். இதேபோன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரியிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து அரசியல் சாசனப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொறுப்பாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித் தார். இதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தீர்த்தராமன், விசிக  மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபேதார், மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைசாமேரி, மாதர் சங்க நிர்வாகிகள் கே.பூபதி, நிர்மலா ராணி, முஸ்லிம் லீக்  மாவட்டச் செயலாளர் சிராஜுதீன், தமுஎகச மாவட்டச் செயலா ளர் ம.சிங்காரவேல், சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செய லாளர் ஜேசுதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.