districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இடங்கணசாலை நகராட்சி –  புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

இளம்பிள்ளை, ஜுன் 18- சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி ஆணை யாளராக பணி புரிந்து வந்த ரவிச்சந்திரன் கடந்த மாதம் பணி  நிறைவு பெற்றார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம், சாத்தூர் நகராட் சியில் பணிபுரிந்த நித்தியா என்பவர் வெள்ளியன்று இடங்க ணசாலை நகராட்சி முதல் பெண் ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு, நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர் கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

“சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் ‘அக்னி பாதை’ திட்டமா?”

சென்னை, ஜூன் 18- சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள்  புகுத்துவது தான் அக்னிபாதை திட்டமா என, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைகளுக்கும் 46 ஆயி ரம் படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னி பாதை என்ற திட்டத்தை மோடிதலைமையி லான பாஜக அரசு அறிவித்துள்ளது. வேலை யின்மை, உறுதியற்ற தன்மை, கேள்விக்குறி யான எதிர்காலம் என்ற கவலையில் இருக் கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பேர திர்ச்சியாக அமைந்துள்ளது. முப்படைக ளின் நீண்ட கால மரபுகள் மற்றும் நெறிமுறை களைத் தகர்க்கும் அக்னி பாதை திட்டம்  ஆபத்தானது. இந்தத் திட்டத்தின் கீழ் பணி யமர்த்தப்படும் வீரர்களுக்கு எதிர்காலம் குறித்த உத்தரவாதம் இல்லை. இந்த அச்சத் தின் காரணமாகத் தான் இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அக்னி பாதை திட்டத்தை முற்றிலும் எதிர்த் துள்ளனர். அக்னி பாதை திட்டம் என்பது சங்பரிவா ரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நட வடிக்கையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. அக்னி பாதை திட்டத்தில் 17 வயது  முதல் 21 வயது வரையிலான இளைஞர் களை மட்டுமே சேர்ப்பது பல கேள்விகளை  எழுப்புகிறது. இதனால், பாதுகாப்புப் படை யில் பணியாற்றும் வாய்ப்பை நமது இளை ஞர்களில் பெரும்பாலோர் இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் ஒவ் வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளை ஞர்கள் அஞ்சுவதால் தான் தன்னெழுச்சி யோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அக்னி பாதை திட்டத்தினால் நாடே தீப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யா மல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக் குதலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவ தையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்து கிறது. இளைஞர்கள் தேன்கூடு போன்றவர் கள். அவர்கள் எதிர்காலத்தின் மீது நீங்கள்  தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவு கள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அழகிரி கூறியுள் ளார்.

எலி பிடிக்க சென்ற வாலிபர் கால்வாயில் தவறி விழுந்து பலி

ஈரோடு, ஜூன் 18- ஈரோடு சென்னிமலை டவுன் அம்மாபாளையம் அன்பு நகரை செர்ந்தவர் ஆறுமுகம் (33), இவர் மீன் பிடித்தல், எலி பிடித்தல் போன்ற வேலைகள் செய்து வந்தார். இவரது மனைவி செல்வி. ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்த தன்று இரவு ஆறுமுகம் தனது மனைவி செல்வியிடம் எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு சென்னிமலையில் உள்ள காட்டூர் வழியா செல் லும் கழிவுநீர் கால்வாய் பகு திக்கு சென்றுள்ளார்.  அப்போது ஆறுமுகம் குடியோதையில் இருந்த தால் கழிநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து காவல் ல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

நியூ திருப்பூர் மக்களுக்கு குடிநீர் வசதி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை 

திருப்பூர், ஜூன் 18- பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நியூ திருப் பூர் பகுதியில் குடியிருந்து வரும் ஆயிரக்கணக்கானோ ருக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்குபாளையம் கிளை சார் பில் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு இது தொடர்பாக கடி தம் எழுதப்பட்டுள்ளது. பரமசிவம்பாளையத்தில் புதிதாக வீட்டுக்குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு பைப்லைன் இல்லாத இடத் தில் புதிதாக பைப் லைன் அமைக்க வேண்டும். அதேபோல்  பொங்குபாளையம் 1ஆவது வார்டுக்கு உட்பட்ட நியூ திருப் பூர், பெரிய ஊஞ்சக்காட்டு பகுதிகளில் ஆயிரக்கணக்கான  மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு இதுவரை எந்த குடிநீர் வசதியும் இல்லை. வேகமாக விரிவ டைந்து வரும் இப்பகுதியிலும், இதற்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளிலும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி அனைத்து குடி யிருப்புகளுக்கும் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எம்.பி. நிதியில் ரேசன் கடை

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காளம்பாளையத்தில் உள்ள  ரேசன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. காளம்பாளையம், பரமசிவம்பாளையம், மகிழ்நகர், மாரப் பன்பாளையம் புதூர், பூத்தார் நகர், பி.ஆர்.நகர், பாபுஜி  நகர், சிவசக்தி நகர், எஸ்பிகே நகர் உள்ளிட்ட ஊர்களைச்  சேர்ந்த 1051 குடும்பங்கள் இந்த கடையில் பொருட்கள் வாங் குகின்றனர்.  எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூ டிய மோசமான நிலையில் இக்கட்டிடம் உள்ளதால், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய  ரேசன் கடையை காளம்பாளையத்தில் கட்டித் தர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பொங்குபாளையம் ஊராட்சியில் கடந்த 40 ஆண் டுகளாக தூர் வாரப்படாத பரமசிவம்பாளையம் கருப்ப ராயன் கோயில் அருகாமையில் உள்ள குட்டையை, பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக, உடனடியாக தூர் வாரி  மழைநீர் தேங்குவதற்கு வழி செய்ய வேண்டும் என முதல்வ ரின் தனிப்பிரிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கிளை சார்பில் கடிதம்  அனுப்பப்பட்டு உள்ளது.

அவிநாசியில் சாலையோர  ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி, ஜூன் 18- திருமுருகன்பூண்டி அணைப்புதூர் பகுதியில் டைடல்  பார்க் வருவதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளியன்று அகற்றப்பட்டது. அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு  உட்பட்ட அணைப்புதூர் குடிசை மாற்று வாரியத்தின் மூலம்  அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பின்பு றத்தில் டைடல் பார்க் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப் பட்டு, கட்டுமானத்திற்கு உரிமம் பெறப்பட்டது. இந்நிலை யில் கட்டுமானப்பணிகள் துவங்குவதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்க னவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், அகற்றப்ப டாமல் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர், திருமுருகன்பூண்டி நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

சத்துணவு அமைப்பாளர்  பணியிட மாற்றம்

அவிநாசி, ஜூன் 17- சத்துணவு அரிசியை விற்பனை செய்ததாக  வந்த புகாரையடுத்து, அவிநாசியில் சத்துணவு  அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவிநாசி காவல் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் சத் துணவு அமைப்பாளர், சத்துணவுத்திட்டத்துக்கு  விநியோ கிக்கப்பட்ட அரிசியை விற்பனை செய்ததாக வியாழக்கி ழமை புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்வி அலுவ லர்கள், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பள் ளியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, சத்துணவு அமைப்பாளர் சாந்தி வேறு பள்ளிக்கு  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிர்வாகத் தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.