districts

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தேர்தல் அதிகாரிகளுடன் துணை ஆணையர் ஆலோசனை

சென்னை,நவ. 10- நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  அதன்படி, மின்னணு இயந்திரங்கள் சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச் சாவடிகளை  தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.  வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிந்ததும் ஜன வரி மாதம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட உள்ளது. இந்தச் சூழலில், மண்டலவாரியாக தேர்தல்  அதிகாரிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான  ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடு பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா  ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோ பார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர் தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள தென்மண்டல ஆலோ சனைக் கூட்டம் வியாழனன்று (நவ.9) சென்னை மீனம்பாக் கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த  துணை ஆணையர் தர்மேந்திர சர்மா உள்ளிட்ட அதிகா ரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரதா சா`ஹூ, காவல்துறை தலைவர் சங்கர்  ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.