“மேக் இன் இண்டியா மோசடி”! பத்தாண்டுகளில் மேக் இண்டியா எனும் முழக்கத்தின் இலக்கு 12-14% வளர்ச்சி! நடந்ததோ 5.9% வளர்ச்சி மட்டுமே! ஜி.டி.பி.யில் ஆலை உற்பத்தி 25% இலக்கு! நடந்தது 16.4%. ஆலை உற்பத்தியில் வேலை வாய்ப்பும் 12.6%லிருந்து 11.6% ஆக வீழ்ச்சி! - சீத்தாராம் யெச்சூரி
18 ஆவது மக்களவை தேர்தலுக்கான தேதி அறி விக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தல், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம்தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தொழிற்துறையினரின் பார்வை எந்த பக்கம் சாயும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. குறிப் பாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ன செய் யப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் தொழிற் துறையினர் பக்கம் காதை தீட்டினோம்… பத்தாண்டுகள் முழு பலத்துடன் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும், தனது ஆட்சியின் சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்கவில்லை. மாறாக இப்போதும் நாட் டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட் சியை குறைகூறிக்கொண்டே இருக்கிறார். அது சரி. ஏதாவது சாதித்துள்ளோம் என்றால்தானே சாத னையைப்பற்றி பேச முடியும். மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக ஆட்சியில், மதவெறி தீயை விசிறிவிட்டதும், கார்ப்ரேட்டுகளுடன் கள்ளக்கூட் டணி வைத்து இந்திய வளங்களை சூறையாடி சுரண்டியது மட்டுமே பிரதானம் என்றால் வேறு எதைப்பற்றி பேச முடியும். எனவே, சூடு பிடித் துள்ள தேர்தல் களம் பாஜகவிற்கு எதிராகவே மக் கள் மனநிலை இருப்பதை உணர முடிகிறது. பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் போராடாத துறைகளே இல்லை என அறுதியிட்டு, உறுதியிட்டு கூறிவிடலாம், விலைவாசி விண்ணை தாண்டி விர் ரென்று செல்கிறது. விவசாயிகள் இப்போதும் போராடிக்கொண்டிருக்கின்றனர். கார்ப்ரேட்டுக ளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை நீர்த்து போகச்செய்ததை கண்டித்து தொழிலா ளர்கள் போராடுகிறார்கள். வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்க ளின் ஊழியர்கள் போராட்ட அறைகூவல் அறிக் கையை அன்றாடம் வெளியிட்டு களம் காண்கிறார் கள். வேலையின்மை தீவிரமடைந்துள்ளது. இளை ஞர்கள் போராடுகிறார்கள், மாணவர்கள் போராடு கிறார்கள், பெண்கள் போராடுகிறார்கள், விளை யாட்டு வீரர்கள் போராடுகிறார்கள், வழக்கறிஞர் கள் போராடுகிறார்கள் என்கிற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அம்பானி, ஆதானி கும்ப லைத்தவிர போராடாத வர்க்கமோ, துறையோ ஏது மில்லை என்பதே மோடியின் பத்தாண்டு ஆட்சியின் நிலை. வெறுப்பின் உச்சத்தில் மக்கள் இருப்பதை உணர்ந்தே, இதனை திசைதிருப்ப சாதி, மதவெறி அஜண்டாக்களை முன்மொழிந்து வெறுப்புத்தீயை உமிழ்ந்து பிளவுவாத நடவடிக்கையை தீவிரப்ப டுத்தி வருகிறது பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டம். ஆனா லும், இம்முறை உணர்ச்சிவயப்படுத்தலுக்கு இறை யாகாமல், தங்களின் வாழ்நிலையில் எந்த மாற்ற மும் பாஜக ஆட்சி ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து மக்களவை தேர்தலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது இந்தியா. அந்த வகையில், கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தொழிற்துறை, நெருக்கடியில் இருந்து தங் களை காக்க இரட்சகன் ஒருவன் வரமாட்டான், நாம் கையிலேயே தீர்வு உள்ளது என மக்களவை தேர் தலை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண் டிருக்கின்றனர் இந்திய தொழிற்துறையினர். அதிலும், குறிப்பாக கோவை தொழிற்துறையி னர் கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியின் அத் தனை கொடூர தாக்குதலையும் எதிர்கொண்டு கனல் கொண்டு காத்திருக்கின்றனர். இன்றைய கோவையில் ஜவுளி உற்பத்தி, நூற்பாலைகள், ஜவுளி இயந்திரங்கள் தயாரிப்பு உள்ளிட்ட ஜவுளி சார்ந்த தொழில்கள், பவுண்டரி, பம்ப்செட், மோட்டார் இயந்திரங்கள், கோழிப் பண்ணை, பண்ணை சார்ந்த பொருள்கள் தயா ரிப்பு, கிரைண்டர்கள், நகை உற்பத்தி, ராக்கெட் முதல் மின்சார கார்கள் வரையிலான வாகனங்க ளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் எம்எஸ்எம்இயில் மொத்தம் 1,94,075 நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் 1,87,511 குறுந்தொழில் நிறுவ னங்கள், 5,951 சிறு நிறுவனங்கள், 613 நடுத்தர நிறுவனங்கள் உள்ளது. இத்தொழில் சார்ந்து சிறுசிறு யூனிட்டுகளாக பதிவு செய்யப்படாத இன்ஞ்சக்சன் மோல்டிங் உள்ளிட்ட பல நூறு நிறுவனங்கள் உள்ளது. இதில், குடும்பத்தினர் மொத்தமாகவே சேர்ந்து உழைக் கிற நிறுவனங்களும் உண்டு. விவசாயம், ஜவுளித் துறைக்கு அடுத்து மிக அதிகப்படியான வேலை வாய்ப்பை தருகிற துறையாக சிறு,குறு, நடுத்தர தொழிற்துறை உள்ளது. கோவை மாவட்டத்தில், நேரடியாக குறுந் தொழில் நிறுவனங்களில் 2.75 லட்சம் பேரும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 1.25 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது போக இதனை சார்ந்து ஐந்து லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வதா ரத்தை பாதுகாத்து வருகின்றனர். 2023-24 நிதி யாண்டு கணக்கெடுப்பின்படி கோவை மாவட்ட மொத்த உற்பத்தி (ஜிடிபி) 33 பில்லியன் அமெ ரிக்க டாலராக உள்ளது. இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழிற்துறை மோடி ஆட்சியில் சொல்லென்னா துயரத்தை சந்தித்து வந்திருக்கிறது. பணமதிப்பி ழப்பு நடவடிக்கை துவங்கி ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என பல தாக்குதல்களை எதிர்கொண்டது. இது தொழில்முனைவோரின் மீதான தாக்குதலாய் மட்டும் இல்லாமல் நேரடியாக தொழிலாளர்கள் மீதான தாக்குதலாய் அமைந்திருந்தது. தொழில்முனைவோர்கள் சிலர்கூட பட்டறை களை மூடிவிட்டு தெருவோரம் பானிபூரி கடை போட்டு தங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாது காக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். குஜராத்தில் இருந்து குறைந்த விலைக்கு கிரைன்டர் இறக்கு மதி ஆவதால், கிரைன்டர் தொழிலின் தாயக மான கோவை வெறும் கையில் மாவை பிசைந்து கொண்டிருக்கின்றனர். ஜாப் ஒர்க் செய்யும் எம்எஸ்எம்இ நிறுவனங்க ளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. 5 சதவீதமாக குறைக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தும் பயன் இல்லை. ஜவளித்தொழிலில் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்வது, பாலியஸ்டர், விஸ்கோஸ் செயற்கை இழைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது, என்டிசி ஆலைகளை இயக்காதது, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்காதது உள் ளிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் தொழில் துறையினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்ற னர். ஆனாலும், அடித்தது வலிக்கவில்லையே என்று சமாளித்து வந்தவர்கள், இப்போது குமு றலை வெளிப்படுத்த துவங்கிவிட்டார்கள். தொழி லாளர்கள் டீக்கடைகளில் பேசிக்கொண்டிருக் கின்றனர், எங்க ஓனர் சூரியனுக்கு போடுங்கிறார், மற்றொருவரோ நீ யாருக்குனா போடு பிஜேபிக்கு மட்டும் போட்டுறாதேங்கிறார் என்றார். இப்படி யான உரையாடல் இருவரின் உரையாடல் மட்டு மல்ல கோவை மாவட்டம் முழுவதும் இதுபோன்ற உரையாடல்கள் தொழில்முனைவோர், தொழிலா ளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. தொழில்முனை வோரும், தொழிலாளர்களும், நாடு காக்க.. நரேந் திர மோடியை வீழ்த்த ஏப்ரல் 19 ஆம்தேதியை எதிர்பார்த்து.. அ.ர.பாபு