districts

img

ஒரே மாதிரியான ஏற்றுக்கூலி வழங்கிடுக சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், மே 9- தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி யான ஏற்றுக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ் மாக் குடோன் சுமைப்பணி தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் குடோனில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு ஒரே மாதிரியான ஏற்றுக் கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வழங்க வேண்டும். இஎஸ்ஐ, ஈபிஎப் உள்ளிட்ட அரசு திட்டங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற் படுத்தி தர வேண்டும். காண்ட்ராக்ட் நிர்வாகத்துடன் கூலி உயர்வு ஒப்பந்தத் தில் டாஸ்மாக் நிர்வாகம் தலையீடு  செய்து கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண் டும். பணியிடத்தில் குடிநீர், முதலு தவி பெட்டி வசதி ஏற்படுத்தி தர  வேண்டும். அனைத்து தொழிலாளர் களுக்கும் அடையாள அட்டை வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மல்லூர் டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் பொறுப்பாளர் சிவக் குமார் தலைமை வகித்தார். இதில்,  சுமைப்பணி சம்மேளன பொதுச்செய லாளர் ஆர்.வெங்கடபதி, ஒருங்கிணைப் பாளர் வெற்றி உள்ளிட்ட திரளான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.