districts

img

பிளாஸ்டிக் கழிவு குவியலால் கால்நடைகளுக்கு ஆபத்து

உதகை,மார்ச் 6- உதகை நகராட்சிக்குட்பட்ட இரண் டாவது வார்டு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததாலும், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து இருப்பதால் கால் நடைகள் அதனை உட்கொண்டு உயி ரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை, பிங்கர்  போஸ்ட் அருகே உள்ள நகராட்சிக்கு உட்பட்ட 2 ஆவது வார்டு பகுதி பாரதி யார் நகர் இப்பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீர மைக்கப்படாததால் இப்பகுதியில் வசிக்கும் முதியோர்கள், பள்ளி மற்றும்  கல்லூரி செல்லும் மாணவ, மாணவி கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.  மேலும், இப்பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், உள்ளிட்ட குப் பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் மேய்ச்சலுக் காக சுற்றித் திரியும் ஆடு, குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும்  வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவு களை உட்கொண்டு உயிரிழக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலம் துவங்குவ தற்கு முன் பாரதியார் நகர் பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் எனவும், வனப்பகுதிகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்ப குதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.