districts

img

இ-பாஸ் முறையால் வாழ்வாதாரம் பாதிப்பு

உதகை, மே 21- இ-பாஸ் முறையால் வாழ்வாதாரம் பாதிப்பு எற்பட்டுள்ளதால், இந்த முறையை  மறுபரிசீலனை செய்ய உதகை வியாபாரி கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப் ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெ றுவது வழக்கம். இங்கு மலர் கண்காட்சி, குதி ரைப் பந்தயம், ரோஜா கண்காட்சி உள் ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு.  அதனை காண்பதற்காக தமிழ்நாடு, கேரளா,  கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தின் பிறப்பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலாப்  பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத  காரணத்தினால் வாகன நெரிசல் தங்கும் விடு திகளில் விலை உயர்வு, உணவு விடுதிகளில் சாப்பாடு தட்டுப்பாடு ஆகிய சிரமங்களுக்கு இடையே வந்து செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உயர்  நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வா கம் இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்த கோரி உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நிர் வாகம் கடந்த மே 7 ஆம் தேதியன்று முதல், ஜூன்  30 ஆம் தேதி வரை இத்திட்டத்தை அமுல்படுத்தியது. இந்த இ- பாஸ் திட்டம் எளிமையாக இருந்தாலும் சுற்றுலாப் பய ணிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டை விட நடப் பாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாத் தொழிலை நம்பி யுள்ள, தங்கும் விடுதிகள், உணவு விடுதி, சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மிகவும் வாழ்வாதார பாதிப் புக்கு உள்ளாகினர். இந்த இ-பாஸ் திட்டத்தை  அமுல்படுத்தினாலும் சுற்றுலாப் பயணிகள்  எளிமையான முறையில் வந்து செல்வதற் கான விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்ப டுத்தி தர வேண்டும். மேலும் சுற்றுலா வாழ்வா தாரத்தை நம்பியுள்ளவர்களுக்கு வாழ்வா தாரம் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக  அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் சென்னை  உயிர் நீதிதமன்றத்தில் இ-பாஸ் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஆவன செய்ய வேண் டும் என, அனைத்து வியாபாரிகள் வலியுறுத் தியுள்ளனர்.  இது குறித்து, அப்பகுதியினர் கூறுகை யில், நான் கடந்த 30 ஆண்டுகளாக தாவரவி யல் பூங்கா அருகில் கடை வைத்து வியாபா ரம் செய்து வருகிறேன். ஆறு மாதம் வியாபா ரம் இல்லாமல் மிகவும் குழந்தைகளை படிக்க  வைப்பதற்கு சிரமப்பட்டு வருகிறேன். இந்த  கோடை சீசன் காலங்களான ஏப்ரல், மே  மாதங்களில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக உதகை வருகை தருவதால் கடை யில் வியாபாரம் சூடு பிடிக்கும். இந்த வியா பாரத்தில் கிடைக்கும் பணத்தில், குடும் பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது இ- பாஸ் திட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததனால் வியாபாரம் இன்றி  வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என பொம்மை வியாபாரி முஸ்தபா தெரி வித்தார்.  கடந்தாண்டு இ - பாஸ் திட்டம் இல்லாத தால் கணிசமான சுற்றுலாப் பயணிகள் வந்த னர். வியாபாரம் நல்ல நிலையில் இருந்தது  இதனை நம்பி நடப்பாண்டில் வியாபாரத்திற் காக பல இடங்களில் கடன் பெற்று வியாபா ரத்திற்கான பழ வகைகளை வைத்தோம். ஆனால், நடப்பாண்டில் இ-பாஸ் திட்டம் வந்த தால் வியாபாரம் இன்றி பழங்கள் தேங்கி யுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கட்டுவதற்கான சூழ்நிலையும் இல்லா மல் தவித்து வருகிறேன். மேலும் குழந்தைக ளின் கல்லூரி படிப்புக்காக பணம் இன்றி  தவித்து வருகிறேன். இதற்காக தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழ  வியாபாரி விஜயலட்சுமி தெரிவித்தார். சீசன் காலங்களான ஏப்ரல், மே மாதங்க ளில் தான் வியாபாரம் நன்றாக இருக்கும் அப்போதுதான் எங்களது வாழ்வாதாரம் செழுமையாக இருக்கும். இதனை நம்பி நடப் பாண்டும் பல்வேறு இடங்களில் பொருட் களை வாங்கி கடைகளில் வைத்துள்ளோம்.  ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர் தல், இ- பாஸ், கனமழை உள்ளிட்ட காரணங் களால் வியாபாரம் இன்றி தவித்து வருகி றோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் இ- பாஸ் முறையை எளிமைப்படுத்துவதற்கான திட்ட  அறிக்கையை தமிழக அரசுக்கு தயார்படுத்தி  அனுப்பினால் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படா மல் இருக்கும் என நம்புகிறோம் என பேன்சி  ஸ்டோர் வியாபாரி அஜ்மல்கான் தெரிவித் தார். ஜே.ஷேக் அமின் உதகை