இதனிடையே பொள்ளாச்சி செஞ்சேரி பகுதியில் மதுவிற்பதாக தகவலறிந்து சென்ற மதுவிலக்கு போலீசார் மீது பார் உரிமையாளர்கள் நாயை ஏவிவிட்டு விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், செஞ்சேரி புதூர் பகுதி யில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோராக நடைபெறும். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும், அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்தும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. மே தினம் விடுமுறை தினத்திலும் மதுவிற்பனை நடை பெற்றது. இதனையறிந்து வந்த மதுவிலக்கு போலீசார் மீது நாயை ஏவி விட்டனர். இதில், இரண்டு காவலர்களை நாய் அழுத்தமாக கடித்துள்ளது. ஆனாலும், இந்த தகவல் கசியாமல் காவல் துறையினரே பார்த்துக்கொண்டனர். பாதிக்கப்பட்ட காவ லர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.