சென்னை, மே 11- தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை தொழில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான யுனைட் சங்கம் முறைப்படி சிஐடியு வில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் பல்வேறு பன்னாட்டு பெரும் நிறுவனங் கள் சட்ட விரோத ஆட்குறைப்புகளை அமல்படுத்திய பின்னணியில் இந்த சங்கம் துவங்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின் பெரு மளவு இணைய வழியில் செயல்பட்டு கொண்டிருந்த சூழலில், மே 8 ஆம் தேதி அன்று சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் நேரடியாக நடை பெற்றது. இதில் யூனியன் ஆப் ஐடி மற்றும் ஐடிஇஎஸ் எம்ப்ளாயீஸ் (யுனைட்) சங்கத்தை சிஐடியு-வுடன் இணைக்கும் தீர்மானத்திற்கு ஒருமன தாக ஒப்புதல் இந்தகூட்டத்தில் ஒப்பு தல் வழங்கப்பட்டது. பெரும் நிறுவனங்களுக்குள் சங் கம் அமைப்பது, தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகாமையில் உள்ள குடியி ருப்பு பகுதிகளில் குழுக்கள் அமைப் பது, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது, மாநில, தேசிய சங்கங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, மற்றும் பணியிடத்தில் சமத்துவமும், ஜனநாயகத்துவமும் நிலைநாட்ட பாடு படுவது என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இந்த முடிவுகளை அமல்படுத்த, தலைவராக பரணீதரன், பொதுச் செய லாளராக வெல்கின், பொருளாளராக இளங்கோ, துணைத் தலைவர்களாக, சுகுமார், கே.சி. கோபிக்குமார், அருண் குமார், துணைச் செயலாளர்களாக, திவ்யா, ராஜ் பிரபு ஆகியோரை உள்ள டக்கிய 21 பேர் கொண்ட செயற்குழு தேர்வுசெய்யப்பட்டது.
பாராட்டு
கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஐடி துறை எழுத்தாளர்களான ஹரிஷ், சிந்துஜா ஆகியோர் எழுதிய “குரலற் றவர்கள்” மற்றும் “பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்” புத்த கங்களுக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். சங்கம் அமைப்பதற்காக இரு முறை பழிவாங் கப்பட்டு அதை முறியடித்து தொடர்ந்து தொழிற்சங்கப்பணியில் ஈடுபட்டுள்ள பிரபுதாஸ் பாராட்டப்பட்டார். தனியார் மய நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிற்சங்க சட்டங்களை தொகுப்பு என்ற பெயரில் சுருக்கியதை கண்டித்தும், பாலியல் துண்புறுத்தல்க ளுக்கு எதிராகவும் விசாகா பரிந்துரை களை ஐடி நிறுவனங்களில் அமல்படுத் தக்கோரியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத் தில் சிஐடியு மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநில செயலாளர் கே.சி.கோபிக்குமார் மற் றும் சுகுமார் உள்ளிட்ட பலர் உரையாற் றினர்.