districts

img

மறக்க முடியாத பாடத்தை மோடிக்கு கற்பிப்போம் பி.ஆர்.நடராஜன் எம்பி., சூளுரை

கோவை, மார்ச் 21 – மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில்  இடமில்லை, என்பதை தமிழக, கோவை  மக்கள் உத்தரவாதப்படுத்தி, மோடிக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம் என  கோவை வேட்பாளர் அறிமுக கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் வேண்டுகோள் விடுத்தார்.  இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அறி முகக் கூட்டம் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்க  வளாகத்தில் வியாழனன்று நடைபெற் றது. இதில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மதுவி லக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை  மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள் ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், கோவை நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் கணபதி  ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்த னர்.  பின்னர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசுகை யில், பிரதமர் கண்ணில் தேர்தல் தோல்வி பயம் தெரிகிறது. பிரத மர் இராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத் துகிறார். தவறுகளை பகிரங்கமாக செய்ய துவங்கியுள்ளார். தேர்தல் அச்சம் பயம் கண்ணில் தெரிகிறது. தின மும் ஆட்டோவில் ஏறி போவது போன்று ஹெலிகாப்டரில் செல்கிறார்.  கூர்ந்து கவனியுங்கள், நமக்கு தான்  தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடு களை விதிக்கிறது. இவர்களை  கண்டு கொள்வதில்லை. கடந்த காலங்களில் கோவை மக்கள் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். மறக்க முடி யாத பாடத்தை பிரதமருக்கு தமிழக, கோவை மக்கள் சொல்லி கொடுக்க வேண்டும். மதவெறி சக்திக்கு இங்கு எந்த விதத்திலும் இங்கு இட மில்லை என்பதை பாஜகவிற்கு புகட்ட  வேண்டும் என்றார்.  மட்டன் பிரியானி தயார் தொடர்ந்து தொழில்துறை அமைச் சர் டி.ஆர். பி., ராஜா பேசுகையில், தமி ழகத்தின் உலக நாடுகள் வியந்து பார்க் கும் வளர்ச்சியை கொடுத்து, தமிழ்நாடு  மட்டும் ஏன், தனியாக ஜொலிக்கி றது, செழிக்கிறது, தனித்துவமிக்க மண்ணாக திகழ்வது ஆச்சரியமளிக் கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.  10 ஆண்டு கால இருண்ட ஆட்சியை அகற்ற  கொரோனா பெருத் தொற்றை தாண்டி,  அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வளர்ந்த  மாநிலமாக மாற்றிய முதல்வர் வேட்பாளரான கணபதி ராஜ்கு மாருக்கு வெற்றியை வழங்க வேண் டும். இது தேர்தல் அல்ல நம் இனத்தை  காப்பாற்ற வேண்டிய போர் தான் என  கருத வேண்டும், இருண்ட ஆட்சியி லிருந்து மீண்டு விட்டோம், இந்தியாவை சூழ்ச்சியாளர்களிடமிருந்து மீட்க வேண் டும். சமூக ஊடங்கங்களில் கள வீரனும்,  அனைவரும் துணை கொடுக்க வேண் டும். திண்ணை பிரச்சாரம் செய்து கட்சி  வளர்த்தோம், எதிரிகள் வாட்ஸ் அப்பில்  வளர்க்கின்றனர். அவர்கள் வளர்ந்து விட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அப்படி ஒன்றும்  ஒரு மண்ணும்  இல்லை. நமது வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெறச் செய்ய இந்தியா கூட்டணி கட்சிகளின் தொண் டர்கள் கடுமையாக உழைக்க வேண் டும். கோவையில் மக்களுக்கு சுவை யான மட்டன் பிரியாணி தயாராக உள் ளது என்றார்.