districts

நவ. 20 அன்று செல்போன்களை அணைத்து குழந்தைகளுடன் ஒரு நேரம் செலவழிப்போம்

சென்னை, நவ.16- குடும்ப உறவுகளை மேம்படுத்த நவ.20 ஆம் தேதி குழந்தைகளுடன் ஒரு நேரம் செல வழிப்போம் என பெற்றோர் வட்டம் அறை கூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய  பெற்றோர்கள் வட்டத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நளினா ராமலக்ஷ்மி கூறுகையில், நேர்மறையான உற வுகள் மற்றும் நெருங்கியவர்களுடன் இருப்ப தன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள். உறவுகளை உருவாக்குவதற்கு மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் குறுக்கீடு கள் இல்லாமல், நம் குழந்தைகளுடன் தர மான நேரத்தைச் செலவிடுவதும் அவர்களு டன் விளையாட்டில் ஈடுபடுவதும், அர்த்த முள்ள தகவல்களை பரிமாற்றம் செய்வதும் தான் அவசியம். ஆரோக்கியமான டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் கேட்ஜட் இல்லாத இணைப்பு நேரம் ஒவ்வொரு குடும்பத்தின் வழக்கமான பகுதியாக மாறவேண்டும். நவம்பர் 20 ஆம் தேதி (உலக குழந்தைகள்  தினம்) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இப்படிப்பட்ட சமூக முன் முயற்சியில் பங் கேற்பதன் மூலம் அனைவரும் தங்கள் குடும் பங்களுடன் மீண்டும் இணையுமாறு பெற் றோர்கள் வட்டம் கேட்டுக்கொள்கிறது. இந்த  ஒரு மணி நேரத்தில், குடும்பங்கள் தங்கள் கேட் ஜட்களை டிஸ்கனெக்ட் செய்து, விளை யாடுவது, பேசுவது, சாப்பிடுவது மற்றும் ஒன் றாகச் சிரிப்பது, மகிழ்ச்சியை வேடிக்கை யான வழியில் மீண்டும் கண்டுபிடிப்பது என தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செல விட வேண்டும் என்று விரும்புகிறது. உங்கள் குழந்தைகளுடன் நம்பகமான  உறவை வளர்ப்பதே வெற்றிகரமான குழந்தை வளர்ப்புக்கு முக்கியமானது. இது நடக்க, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத் தைச் செலவிட வேண்டும்.

அவர்கள் சொல்வ தைக் கேட்பது, அவர்களுடன் அரட்டை அடிப் பது அல்லது விளையாடுவது மற்றும் வேடிக்கை பார்ப்பது, இனிமையான நினைவு களை உருவாக்குவது என இந்த சிறப்புத் தரு ணங்களில் செல்போன் உட்பட பிற கவனச் சிதறல்கள் இல்லாமல் குழந்தைகளுடன் இணைவதில் கவனம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமில்லாமல், இதை ஒரு வழக்கமான நடைமுறையில் கொண்டுவர ஊக்குவிப்போம் என்றார். தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ் ணன் கூறுகையில், மொபைல்கள், ஐபேட் கள், ஐபாட்கள், விளையாட்டு மென்பொருட் கள் போன்றவற்றின் பரவலான பயன்பாட் டின் காரணமாக குழந்தைகளின் கவனம், படிப்பு மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல் பாடுகளிலிருந்து திசை திரும்பியுள்ளது. பிள் ளைகள், பெற்றோரின் அறிவுரைகளைச் சில நேரங்களில் சரிவர கடைப்பிடிக்காமல் போகும் போது குடும்பச் சூழல் மோசமாகப் பாதிக்கப் படுகிறது. இதன் விளைவாக, குடும்ப உறவு கள் உடைந்து போகின்றன. குறிப்பாக பெற் றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும் பங்களில் பெற்றோரும், குழந்தைகளும் டிவி  போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு தின சரி ஒரு மணி நேரமாவது ஒன்றாக நேரம் செலவிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, என்றார்.