districts

கெத்து என சேரும் இளைஞர்கள், உண்மையறிந்து வெளியேறுகின்றனர்!

ஆரம்பத்தில் வீடுகளுக்குள் தான்  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டு வந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, 1980களின் துவக்கம் வரை விநாய கர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதோ, ஊர்வலமாகச் சென்று கரைப்பதோ வழக்கமாக இருந் ததில்லை. 1982இல் மீனாட்சிபுரம் கலவ ரத்தைத் தொடர்ந்து, உருவான இந்து  முன்னணி அமைப்பு 1983 இல் சென்னை யில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஒரு  கோவிலுக்கு அருகில் விநாயகர் சிலை  ஒன்றை வைத்து, சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் இருந்த குளத் தில் கரைத்தனர். வீடுகளில் வைக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில் உள்ள நிலையில், பொது  இடங்களில் இந்துத்துவ அமைப்பின ரால் வைக்கப்படும் விநாயகர் சிலைக ளின் உயரம் ஒவ்வொரு ஆண்டும் அதிக ரித்தே வருகிறது. சில பகுதிகளில் சிறு பான்மையினருக்கு எதிராக இந்நிகழ்வு  மாற்றப்படுகிறது.  இந்த ஊர்வலங்களில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் ஏழை  எளிய, ஒடுக்கப்பட்ட சமூகப் பின்பு லத்தை சேர்ந்த பதின்பருவத்தினரா கவே உள்ளனர். அமைப்புகளின் நிர்வா கிகள் கலந்து கொள்கின்றனர். பெண் கள், பொது மக்கள் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பொதுவாக இந்து முன்னணி அமைப்புகளில் நிரந்த ரமாக இளைஞர்கள் செயல்படுவ தில்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத் திற்கு செயல்படுகின்றனர். அதன்பின் வெளியே வந்து விடுகின்றனர். இந்து முன்னணியில் செயல்பட்டு  வெளியேவந்த ஒருவர் கூறுகையில், அப்போது எங்கள் பள்ளியில் உள்ள மாணவர்கள் இந்து முன்னணியில் இணைவது கெத்து என்று கூறுவார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது உனக்கு ஏதேனும் பிரச்சனை என் றால் நாங்கள் வருவோம் என்று  கூறி என்னிடம் கூறினர். அதன் பிறகு நான் அமைப்பில் இணைந்தேன். நண் பர்கள் 20க்கும் மேற்பட்டோர் இணைந் தோம். எங்கள் பகுதியில் 15க்கும் மேற் பட்ட வீதிகள் உள்ளது. அதில் விநாயகர்  சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்ப துதான் எங்களது பிரதான பணி. 300க்கும் மேற்பட்ட சிலைகள் எங்கள் பகுதி தலைவர் தலைமையில் வைக் கப்பட்டும். ஒவ்வொரு சிலைகளுக்கும் ஒரு எண் வழங்கப்படும். அதை யொட்டி சிலை வைப்பதற்காக ஒவ் வொரு கடை, நிறுவனங்களுக்குச் சென்று வசூல் செய்து சிலை வைப்பது  வழக்கம். பொதுவாக சிலையின் தொகை மிக குறைந்தே இருக்கும்  ஆனால் நாங்கள் பெரும் அளவில் வசூ லிப்போம். அதை எங்கள் பொறுப்பாள ரிடம் கொடுத்து விடுவோம். அவர்களும்  ஊர்வலத்திற்கு ஆகும் செலவுகளை இதை வைத்து ஈடுகட்டுவதாக கூறு வார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்பது பின்நாட்களில் தான் தெரியவந்தது. பெறு நிறுவனங்கள் நிதி  உதவி மூலம் தான் ஊர்வலம் உள்ளிட்ட வைகளுக்கு ஆகும் செலவுகளை ஈடு  கட்டப்படுகிறது. பெரும்பாலும் கடை, வணிக நிறுவ னங்களில் வசூல் செய்யப்போகும் போது அவர்களாகக் கொடுப்பதை வாங்க மாட்டோம். அவர்கள் 150 ரூபாய்  கொடுத்தால் எங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால்தான் செல்வோம் என்று  கூறுவோம். அவர்களும் வேறு வழி யில்லாமல் கொடுத்து விடுவார்கள். சில  நேரங்களில் வசூல் செய்யும்போது பிரச் சனைகள் ஏற்பட்டு, வழக்கு வந்தால், “அவர்கள் எங்கள் அமைப்பே இல்லை!” என்று கூறிவிடுவார்கள். அவர்களின் சொந்த பிள்ளைகளை இந்த அமைப்புகளில் விடுவதில்லை. பொதுவாகவே இந்த அமைப்புகளில் செயல்படும் இளைஞர்கள் தொடர்ந்து  இந்த அமைப்புகளில் செயல்படு வதில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளில் வெளியே வந்துவிடுவார்கள். முக்கிய மாக கல்லூரி சென்ற பிறகு இந்த  அமைப்புகளின் தொடர்பை துண்டித்து  விடுவார்கள். பல முக்கிய பொறுப்புக ளில் இருந்தவர்களும் கூட திருமணம் ஆன பிறகு வெளியே வருகின்றனர். இத்தனைக்கும் பொறுப்புகளில் இருந் தவர்களுக்கு வாரம் ஒருமுறை வெள்ளி யன்று நடத்தப்படும் பைட்டேக் எனப்ப டும் வகுப்புகளில்கூட கலந்து கொண்ட வர்களாக இருப்பார்கள். இந்த அமைப் புகளில் உள்ளவர்கள்  மதத்தை வளர்ப் பதாக கூறுவார்கள். ஆனால் பிற மதத் தின் மீது வெறுப்பைத் தூண்டும் வகை யில் பேசுவதை தவிர வேறு எந்த செயல் திட்டமும் இருப்பதாகத் தெரிய வில்லை. இந்த அமைப்புகளில் இணை பவர்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர் களாகவே உள்ளனர். பள்ளி பருவத்தில்  நமக்கு பின்னால் 20 பேர் இருப்பது ஒரு  கெத்து, நம்மை யாரும் அடிக்க முடி யாது, நாம் தான் பெரிய ஆளு என்பது  போன்ற தோற்றம் ஒரு வித போதை போன்றது. அதுவே இது போன்ற அமைப்புகளில் சேர்வதற்குத் தூண்டு கிறது. முறையாக கல்லூரி படிப்பு  முடித்து வேலையில் சேருபவர்களுக்கு  உலக நடப்பு தெரிந்து விடுகிறது. அதன்  பின் இது போன்ற அமைப்புகளில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள் என்றார். -லிவின்