districts

img

திருப்பூரில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

திருப்பூர், மே 25- திருப்பூர் மாநகரில் ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப் பில் ஏழு புதிய திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் புதனன்று தொடக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி, 47 ஆவது வார்டு, விஜயா புரம் - புண்ணியவதி சாலையில் பொது மக்களின் பங்க ளிப்பாக ரூ.30 லட்சம், அரசின் சார்பில் ரூ.60 லட்சம் ஆக மொத்தம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே  திட்டத்தின் கீழ் தார்சாலை அமைத்தல் பணி தொடங்கி  வைக்கப்பட்டது. அதேபோல் 30ஆவது வார்டு லட்சுமி  நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையக் கட்டிடம் மற்றும் அதே  வார்டில் லட்சுமி நகர் 50 அடி பிரதான சாலையில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 485 மீட்டர் நீளமுள்ள 2 புதிய சாலைகள், 19ஆவது, வார்டு இஆர்பி லே-அவுட்டில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 312 மீட்டர் நீளமுள்ள 2 புதிய சாலைகள், 17ஆவது வார்டு நெசவாளர் காலனியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும்  ஆரோக்கிய மையம் கூடுதல் கட்டிடம் என ஏழு பணிகள் தொடங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன், வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பி னர் கே.என்.விஜயகுமார், துணை மேயர் ரா.பாலசுப்பி ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.