districts

திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி டிச.10- தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு  தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏலகிரி அரசு பள்ளி  மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவ லர் பாராட்டு தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன் றியத்திற்கு உட்பட்டது ஏலகிரி பகுதி. இந்த  பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ஏலகிரி சுற்று வட்டார பகுதி மற்றும் சாமிசெட்டிப்பட்டி,  தண்டுகாரம்பட்டி, கொட்டுப்பட்டி போன்ற  பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த  மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மற்றும் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு  அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஏலகிரி அரசு மேல் நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு படிக் கும் மாணவர்களும் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வில் முகேஷ் 89 மதிப் பெண், கவிப்பிரியா 83 மதிப்பெண், கௌதம்  82 மதிப்பெண்,மோனிகா 81, லோகேஸ்வரி 80 மதிப்பெண் எடுத்து ஆகியோர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1500 தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழ் நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் புனிதா, முகேஷ் ஆகிய இருவரும் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இவர்களுக்கு இளநிலை  பட்டப்படிப்பு வரை ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10000 வீதம் கல்வி உதவித்தொகை யாக தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.  இதனால் தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களை தருமபுரி முதன்மை கல்வி அலு வலர் ஜோதி சந்திரா நேரில் பள்ளிக்கு வந்து  வாழ்த்து தெரிவித்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.