பென்னாகரம், செப்.8- பென்னாகரம் அருகே கற்கால கருவியை கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவனுக்கு பாராட்டுக் கள் குவிந்துவருகின்றன. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அருகே உள்ள அளேபுரம் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜய். இவர் தனது தாத்தா ராஜூவுடன் சேர்ந்து கூத்தப்பாடி, அம்மாபள் ளம் அருகே உள்ள தனது விவ சாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது கூர்மையான கற்கள் இருப்பதை பார்த்த மாணவன் அஜய் இந்த கற்களை பள்ளிக்கு சென்று தனது வரலாற்று ஆசிரியர்களி டம் வழங்கியுள்ளான். இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் முருகா மற் றும் கணேசன் ஆகியோர் கூறுகையில், இந்த கற்கள் புதிய கற் காலத்தில் கல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டவை. இதனைக் கொண்டு உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மரத்தை வெட்டும் கோடாரியாகவும் பயன்படுத்தி இருக்கலாம். இந்த கல் ஆயுதங்கள் பென்னாகரம் அருகே பூதிநத்தம் அகழ்வாய் வில் தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதத்தை போன்றே உள் ளது. ஆகவே, இது புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன் படுத்திய கல் ஆயுதமாக இருக்கலாம், என்றனர். மேலும், மாணவன் கண்டெடுத்த கூர்மையான புதிய கற்கால கல் ஆயுதத்தை பள்ளியில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டது. இதனை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்ற னர்.