உதகை, மார்ச் 17- கூடலூர் அருகே வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய் யக்கோரி கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்த பொதுமக் கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழக வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த தடையை அமல் படுத்தினால் லட்சக்கணக்கான கால்நடைகள் மற்றும் கால் நடை தொழிலை நம்பி உள்ள மக்கள் பாதிக்கபடுவார்கள் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம், மசினகுடியில் ஆயிரக்கணக்கான நாட்டு மாடு களை வளர்த்து வரும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகை யில், நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 2006 வன உரிமை சட்டபடி மசினகுடி பகுதியில் பல ஆண்டுக ளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண் டும், என்றனர். முன்னதாக கருப்புக்கொடியை கையில் ஏந்தி, காளை மாடுகளுடன் மசினகுடி பஜாரில் மக்கள் ஊர்வலமாக வந்த னர். இதைத்தொடர்ந்து கால்நடைகளை வழக்கம்போல வனப்பகுதியில் மேய்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி வனச்சரக அலுவலகம், கூடலூர் சட்டமன்ற உறுப்பி னர் பொன்.ஜெயசீலன், மசினகுடி ஊராட்சி மன்ற தலைவர் மாதவி ஆகியோரிடம் மனு அளித்தனர்.