கோவை, செப்.1- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிணத்துக்கடவு ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிணத்துக்கடவு ஒன்றியப் பேரவை கூட்டம், ஞாயிறன்று வடசித்தூரில், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ஆனந்தராமன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் வி.ஆர்.பழனிசாமி துவக்கவுரையாற்றி னார். இக்கூட்டத்தில், நியாய விலைக்கடை களில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மனித - வன விலங்கு மோதலை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலைவராக எம்.ஆர். கந்தசாமி, செயலாளராக சண்முகம், பொரு ளாளராக எம்.குமார் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் ஸ்டாலின் பழ னிசாமி, கே.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தொண்டாமுத்தூர் ஒன்றியப் பேரவைக்கூட்டம் ஆலாந்துறை யில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் துவக்கி வைத்தார். ஒன் றியச் செயலாளர் எ.காளப்பன் வேலை அறிக்கை வைத்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், ஆறுச்சாமி, தங்க வேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி நிறைவுரை ஆற்றினார்.