ஒன்றிய அமைச்சரிடம் மனு சேலம், செப்.30- சேலம் உருக்காலையை பொதுத்துறை யாகவே நீடித்திட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய அமைச்சரிடம் சிஐடியு-வினர் மனு அளித்தனர். சேலம் உருக்காலைக்கு திங்களன்று ஒன் றிய உருக்குத்துறை அமைச்சர் எச்.டி.குமார சாமி வருகை தந்தார். அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் உருக்காலை விரிவாக்கம், துருப்பிடிக்காத எஃகு தயாரிக்க இரண்டு அலகுகள், எல்பிஜி எரிவாயுவை கட்டுப்படுத்த இயற்கை எரி வாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என குமாரசாமி தெரிவித்தார். இதனிடையே, சிஐடியு சேலம் உருக்காலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள், குமாரசாமியிடம் மனு அளித்தனர். அதில் உருக்காலையை பொதுத் றையாகவே நீடித்திட வேண்டும். மேலும், புதிய முதலீடுகள், நிரந்த பணியாளர்களை பணியமர்த்தல், ஊதிய ஒப்பந்தம் விரைவு படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப் பட்டிருந்தது.