districts

img

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது: கரையூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வு

தாராபுரம், மார்ச் 6 – அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய் யப்பட்டுள்ள கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  தலைமையாசிரியை வி.கல்பனாவுக்கு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி னார்.  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. மாநில தேர்வு குழுவால் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், திருப்பூர் மாவட்டத்தில் 2 பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் கரை யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வி.கல்பனா 2022 - 2023 ஆண்டிற்கான அறிஞர் அண்ணா தலை மைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைய ரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு  சான்றிதழ், கேடயம் மற்றும் பள்ளிக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் நிதியை வழங்கி பாராட்டினார். விருது பெற்ற தலைமையாசிரியை வி.கல்பனாவிற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற் றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித் துள்ளனர். தலைமையாசிரியை வி.கல்பனா 2021 ஆம் ஆண் டும் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பி டத்தக்கது.