உலக அளவில் கால்பந்துக்கு பிறகு, பெரும் பாலான மக்களால் பார்க்கப்படும், கொண் டாடப்படும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். இப்போட்டியில் குறிப்பிட்டு சிறந்து விளங் கும் அணிகளில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் என அனைத்து வித போட்டியிலும் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 20 ஓவர் போட்டியை காண மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் ஆண்டுதோறும் நடத் தப்பட்டும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட் டிக்கு, உலக அளவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெறும் இப்போட்டிகள், இந்தியாவின் 10க்கு மேற்பட்ட நக ரங்களில் நடைபெறும். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இருந்த ஏராளமானோர், இப்போட்டியை காண மைதானத்துக்கு வந்து செல்வர். அதுமட்டு மில்லாமல், தொலைக்காட்சி, ஓடிடி, சமூக வலை தளங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தையாக ஐபிஎல் இருக்கிறது. அதிகம் பணம் புழங்கும் போட்டியாக வும் ஐபிஎல் உள்ளது. பொதுவாகவே கிரிக்கெட், சூதாட்டம், அரசியல் என்கிற விமர்சனம் இருந்த போதிலும், இந்திய பார்வையாளர்களில் சுமார் 75 சதவிகிதமானோர், ஐபிஎல் போட்டியை பார்ப தாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டி, இரவு 11.45 வரை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களான சனி மற் றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை, இரவு என இரு பிரிவாக போட்டிகள் நடைபெறுகின்றன. இவ் வாறு காலையில் வேலை, மாலையில் ஐபிஎல் என கிரிக்கெட் உலகத்தில் இந்திய இளைஞர்கள் மூழ்கி கிடக்கின்றனர். கப்பு முக்கியம் பிகிலு என இந்த ஐபிஎல் கிரிக் கெட் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையேதான், இந்திய நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக் கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தற்போது சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. வேட்பா ளர்கள் தேர்தல் பரப்புரைகளில் விறுவிறுப்பாக ஈடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக் கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளி யிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்கள வைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறு கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதே சம், புதுச்சேரி உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இதனால், ஒவ்வொரு கட்சியும் சூறாவளி பிரச்சா ரத்தை தொடங்கியுள்ளன. ஒரு பக்கம் தேர்தல், ஒரு பக்கம் ஐபிஎல் என இந்திய மக்களின் கவனம் இரண்டு பக்கமும் குவிந்துள்ளது. இந்த சூழலில், இந்நாட்டு மக்களுக்கு இது முக்கியமான தேர்தல் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். இது தேர்தல் அல்ல ஜனநா யக திருவிழா என தேர்தல் ஆணையம் சொன்னது போல, இன்று திரும்புகிற திசையெல்லாம் அரசி யல் குறித்த பேச்சாகவே உள்ளது. ஒற்றை விர லில் கருப்பு மை இட்டு, இருண்ட கால மோடியின் ஆட்சியை விரட்டி விடியலை தேடித்தருவார்கள் என்கிற நம்பிக்கையை இந்தியா கூட்டணி ஏற்ப டுத்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், வேலையின்மை, ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் நஷ்டம், பணமதிப்பிழப்பால் மக்கள் மத்தியில் பணபுழக்கம் குறைந்தது. தனியார்மயக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்களை இழந்தது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, இதனை திசை திருப்ப மதத்தை அடிப்படையாக கொண்டு சட்டம் இயற்றுவது, சிறுபான்மையினர், பட்டியிலனத்தவர் மீதான தாக்குதல், 100 நாள் வேலைத் திட்டத்தை அடியோடு ஒழிக்க, பணம் ஒதுக்காமல், சம்பளம் தராமல் அலைகழிக்க வைப்பது. தொழிலாளர் விரோத சட்டத்தால் வஞ் சிப்பது. கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டங் களை திருத்துவது என தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கல்விக்காக ஒதுக்கப்பட்டு வந்த நிதியை குறைத்த மாணவர் களை வஞ்சிப்பது. புதிய கல்விக் கொள்கையால் குலக் கல்வியை திணிப்பது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை சிதைத்தது என பாசிச மோடி ஆட்சியில் நடந்ததை அடுக்கிக் கொண்டே போகலாம். நாங்கள் சுத்த சுயம்பு என பேசிவந்த பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பல்லாயிரம் கோடிக்கு மேல் பணத்தை சுருட்டியது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அடுத்து பிஎம்கேர் நிதி குறித்த கேள்வி மக்களிடம் இயல்பாக எழுந்துள் ளது. இப்படி கடந்த ஆண்டுகளில் வெறும் மக்கள் விரோத கொள்கைகளேயே பின்பற்றி வந்த ஆட் சியை தூக்கி எறிய இந்திய மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்க ளிப்பது மட்டுமே. மேலும், சுயேட்சையாக இயங்கி வந்த தேர்தல் ஆணையம், சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட துறைக ளையே தங்களின் ஏவல் துறையாக பாஜக மாற்றி விட்டது. ஆங்காங்கே நீதித்துறையிலும்கூட தலை யிட்டு தனக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்றுள் ளது என்கிற விமர்சனங்களும் எழாமல் இல்லை. எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள், எம்.எல்.ஏக்களை மிரட்ட அவர்கள் மீது ஈடி, வருமான வரித்துறை களை ஏவுவது. பணத்தால் மாற்று கட்சி ஆட் களை வாங்குவது. எதிர்கட்சிகளுக்கிடையே பிரித் தாலும் சூழ்ச்சி செய்து தன் பக்கம் இழுப்பது. இதை தான் கடந்த காலத்தில் பாஜக செய்து வந் தது. தற்போது தேர்தல் சமயத்திலும் பல சூழ்ச்சி களை பாஜக செய்ய தயாராக உள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்களை பணத் தால் மயங்க வைக்கவும் வேலைகள் நடப்பதாக கள நிலவரங்கள் சொல்லுகின்றன. வாக்களிக்க பணம் என்கிற கேடுகெட்ட செயலை ஒழிக்க வேண் டும் என இடதுசாரிகள் உரத்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில்தான், வாக்கு களை பெற்று வெற்றி பெற்ற பிரதிநிதிகளையே விலை பேசி வாங்கும் புதிய கேடுகெட்ட அத்தி யாத்தை பாஜக துவக்கிவைத்திருக்கிறது. ஜனநா யகத்தின் அழகே அதன் முரண்தான். அதனை சீர் குலைத்து ஒற்றை என்கிற பாசிச சித்தாந்தத்தை திணிக்க முயல்கிறது பாஜக. திணித்துவிட்ட வேற் றுமைகளால் வேறானாலும், எண்ணங்களால் நாம் ஒன்று என நிருபிக்கும் ஜனநாயக திருவிழாதான் இந்த மக்களவை தேர்தல். யார் அடுத்தது ஆட்சிக்கு வரப்போகிறார்கள்? யார் வர வேண்டும்? என பார்ப்பதை விட, யார் வரக்கூடாது? என்பதுகுறித்து இந்திய வாக்காளர்க ளுக்கு, இந்தியா கூட்டணி தெளிவு படுத்தி விட்டது. பாசிச பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதிலும், அவர்கள் மீண்டும் ஆட் சிக்கு வரக்கூடாது என்பதிலும் இத்தேர்தல் களம் அமைய வேண்டும். இந்திய மக்களின் நலனை பாதுகாக்கும் முனைப் போடு, பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க “இந்தியா கூட்டணி” போராடி வருகிறது. அவர்களுடன் நாமும் இணைவோம். ஐபிஎல் கப்பை காட்டிலும் பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற் றிக்கான கப்பு முக்கியம் பிகிலு. -கோகுலகண்ணன்