திருப்பூர், ஜூலை 15 - உடுமலைப்பேட்டை குரல்குட்டை அரசு தொடக்கப்பள்ளி யில் காமராஜரின் 120 ஆவது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சனியன்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் கௌரி தலைமையுரையில் காமரா ஜரின் மதிய உணவுத்திட்டம் குறித்தும், ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தது குறித்தும், அவரது பணிகள் குறித்தும் விவரித்தார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் கி.கனக ராஜ் காமராஜரின் எளிமை குறித்தும், கல்வித்துறையில் ஏற்ப டுத்திய மாற்றங்கள் குறித்தும், அவர்காலத்தில் உருவாக் கப்பட்ட திருமூர்த்திமலை அமராவதி அணைத்திட்டங்கள் குறித்தும் பேசினார். பள்ளி மாணவர்கள் காமராஜர் குறித்து பேசினர். முன்னதாக காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங் கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் உமாமகேஸ்வரன், உமாம கேஸ்வரி, முன்னாள் கிராம உதவியாளர் திருமூர்த்தி, குரல் குட்டை செல்லமுத்து உட்பட பள்ளி மாணவர்கள் பலர் பங் கேற்றனர்.