நாமக்கல், ஆக.29- முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து பரமத்திவேலூர் அரசு மருத் துவர்கள் சாதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சீரங்கன் (65). இவர் இடது முழங் கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந் தார். ஆனால் குணமாகவில்லை. இந் நிலையில், பரமத்திவேலூர் அரசு மருத்துவ மனையில் முழங்கால் வலி காரணமாக மருத் துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கோகுல் தலைமையிலான குழுவினர், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள மருத்து வக்குழுவினர் சீரங்கனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீரங்கன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித் தனர்.