நாமக்கல், மார்ச் 2- சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில், சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். நாமக்கல் மாவட்டம், சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிக்குழு தலைவர் பி.ஆர்.ராஜசேகர் தொடங்கி வைத் தார். இப்போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட னர். சாலப்பாளையம் ஊர் மக்கள் சார்பில் இப்போட்டி நடை பெற்றது. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு டிவி, டேபிள், சேர், வெள்ளிகாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட் டன. மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மாடுகளை அடக்கியதை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்த னர்.