திருப்பூர், ஜன.25- உடுமலை அருகே ஜெயின் இரிகேஷன் சிஸ்டம் தொழிலாளர் பிரச்சனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் வலியுறுத்தி னார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று ஜெயின் இரிகேஷன் தொழிலா ளர்களுடன் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியர் வினித்தை சந் தித்து மனு அளித்து பேசினார். அப் போது, திருப்பூர் மாவட்டம், உடு மலை வட்டம், எலையமுத்தூர் கிராமத்தில் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம் லிமிடெட் என்ற பழக்கூழ் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சிஐ டியு சங்கம் வைத்ததற்காக 29 தொழிலாளர்களை அந்த ஆலை நிர்வாகம் வெவ்வேறு ஊர்க ளுக்கு இடமாற்றம் செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பேரிடர் காலத்தில், பழி வாங்கும் நோக்கத்தில் சட்டவிரோதமாக சம்பந்தமில்லாத துறைக்கு பணி யிட மாற்றம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலை இழப்பையும், உயிர் பயத்தை ஏற்ப டுத்தும் இந்த பணி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி கடந்த டிசம் பர் 27 ஆம் தேதி முதல் கடந்த 30 நாட்களாக தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். ஆகவே, தொழிலாளர் பிரச் சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைக்கும்படி பி.ஆர்.நட ராஜன் எம்.பி., வலியுறுத்தினார். விசைத்தறி பிரச்சனை மேலும், திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி வேலை நிறுத்தம் தொடர்ந்து வரும் நிலை யில் கூலி உயர்வு பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காணவும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தினார். முன்னதாக, இந்த சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், ஒன் றிய செயலாளர் மூர்த்தி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.