தருமபுரி, பிப்.10- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில், நடை பெற உள்ள போராட்டத்தை வெற்றிகர மாக்குவது என போராட்ட ஆயத்த மாநாட் டில் முடிவு செய்யப்பட்டது. பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, சிறப்பு கால முறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் பிப்.15 ஆம் தேதி யன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் பிப்.26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்து வது என வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. தரு மபுரி சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்ற மாநாட்டிற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுருளிநா தன், பி.எம்.கெளரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் கு.ராஜராஜன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் இலா.தியோடர் ராபின்சன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டம், திருவாக்கவுண் டனூர் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் நா.பெரியசாமி வரவேற் றார். இதில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணா குபே ரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வெ.அர்த்த நாரி, மாநில உயர்மட்ட குழு உறுப்பி னர்கள் கா.சந்திரசேகர், மாநில ஒருங்கி ணைப்பாளர் பொன்.செல்வராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் ந.திருவரங் கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை தாமஸ் கிளப்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெக நாதன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரி யர் கழகம் மாவட்டச் செயலாளர் சாலமன் ராஜ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சி.அரசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தங்க பாசு, நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ. அம்சராஜ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். ஈரோடு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட் டில் வங்கி ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கி ணைப்பாளர் ச.நேரு சிறப்புரையாற் றினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் க.தங்கவேலு, தமிழக ஆசிரியர் கூட்ட ணியின் மாநில மகளிரணி செயலாளர் கு.ராமாராணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் க.சு.பிரகாசம், தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி கணிணி ஆசி ரியர் சங்க மாநிலப் பொருளாளர் ரவிக் குமார், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசி ரியர் சங்க மாநிலத் தலைவர் ஜி.நாக ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர்.