திருப்பூர், அக்.24 – மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா வின் புறக்காவல் நிலையமாக இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்று அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையப் பொறுப்பாளர் கே.கணேசன் கூறினார். திருப்பூர் சமரச சன்மார்க்க சங்க வளா கத்தில் ஞாயிறன்று தோழர் கே.தங்கவேல் நினைவு வாசிப்பு வட்டத்தின் சார்பில் பாலஸ் தீன்: நேற்று, இன்று, நாளை என்ற வாசகர் அமர்வு நடைபெற்றது. வாசிப்பு வட்டத்தின் சார்பில் வே.தூயவன் தலைமையில் நடை பெற்ற இந்த அமர்வில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அக மது இஸ்ரேல், பாலஸ்தீன முரண்பாட்டின் வரலாற்றுப் பின்னணி குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரலாறு, மதம், இனம் ஆகிய பின்னணியில் இஸ்ரேலியர்கள், பாலஸ்தீ னர்கள் குறித்து அவர் எடுத்துக் கூறினார். இதையடுத்து அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் பொறுப் பாளர் கே.கணேசன் இன்றைய சூழ்நிலை யில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு இடை யிலான போர் இதனால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலை குறித்து கூறினார். அவர் கூறுகையில், பாலஸ் தீன நிலப்பரப்பை பிரித்து இஸ்ரேல் என்ற நாட்டை பிரிட்டீஷார் உருவாக்கினர். எனினும் இஸ்ரேலிய இனவெறி தேசியவாதத்தின் கீழ் படிப்படியாக பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இன்று காஸா, மேற்கு கரை ஆகிய இரு பகுதிகளில் மட்டும் பாலஸ்தீனி யர்கள் வாழும் நிலையை ஏற்படுத்தி உள்ள னர். பல்வேறு முறை இருதரப்பு பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடப்பட் டாலும் அவை முறையாக அமல்படுத்தப்பட வில்லை. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகள் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்பதே சர்வதேச நாடுகளின் பொதுவான நிலைபாடு. ஆனால் அதை ஏற்று நடைமுறைப்படுத்த இஸ்ரேல் முன்வரவில்லை. யாசர் அராபத் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக் கம் அமைதி வழியில் தீர்வு காண முயற் சித்தது. எனினும் தீர்வு காண முடியாத நிலை யில் ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களி டம் பெரும் ஆதரவு பெற்ற இயக்கமாக வளர்ந்தது. அதேசமயம் தற்போது ஹமாஸ் அமைப்பு தாக்குதலைத் தொடங்கிய நிலை யில் இஸ்ரேல் இதை ஒரு வாய்ப்பாக கொண்டு, முழுமையாக பாலஸ்தீன நிலப்ப ரப்பை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக் கத்தில் மிகப்பெரும் தாக்குதலை நடத்துகி றது. இதில் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீது குண்டுவீசி ஏராளமான பொது மக்கள் குறிப்பாக குழந் தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரும் மனித இன அழிப்பு நடவ டிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதர வாக செயல்படுகிறது. ஒருபுறம் இருநாடுகள் என்ற கொள்கையை ஏற்பதாகக் கூறும் அமெரிக்கா, மனிதாபிமான உதவிகளை பாலஸ்தீனத்திற்கு வழங்குவதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்துவிட்டது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக இஸ் ரேலை புறக்காவல் நிலையமாக பயன்ப டுத்தி வருகிறது. மிகப்பெரும் அளவு ஆயுத சப்ளை செய்கிறது. அதேசமயம் இஸ்ரேலி லும், அமெரிக்கா உள்பட உலக நாடுகளிலும் இந்த போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத் திற்கு ஆதரவாகவும் மக்கள் போராட்டங் கள் நடந்து வருகின்றன என்று கணேசன் கூறி னார். இந்த அமர்வில் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வாசிப்பு வட்டத்தின் சார்பில் வி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.