districts

img

ரயில் டிக்கெட் பரிசோதிக்க கையடக்க கருவி அறிமுகம்

கோவை, ஜூலை 22- சேலம் கோட்டத்தில் முதல்முறையாக சேரன்  விரைவு ரயிலில் டிக்கெட் பரி சோதிக்க, பரிசோதகர்க ளுக்கு (டிடிஇ) கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி கள் கூறுகையில், சேலம் கோட்டத்துக்குட்பட்ட கோவை -  சென்னை சென்ட்ரல் இடையிலான சேரன் விரைவு ரயிலில் (எண்:12674) டிக்கெட் பரிசோதகர்களுக்கு நவீன கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகளின் விவ ரங்களை விரைவாக சரிபார்க்க முடியும். அதோடு யார் பய ணிக்கவில்லை என்ற விவரம் உடனுக்குடன் பதிவேற்றப்ப டும். இதனால், அவர்கள் டிக்கெட் கட்டணத்தை எவ்வித சிக்க லும் இன்றி விரைவாக பெற இயலும். மேலும், டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு, படுக்கை கிடைக்காத பயணிகளுக்கு, வரிசைப்படி வெளிப்படையாக படுக்கையை ஒதுக்க முடி யும்.  முன்பு ரயிலில் பயணிப்போரின் டிக்கெட்டை பரிசோ திக்க டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளின் விவரங்கள் அடங் கிய நீளமான காகிதத்தில், ஒவ்வொருவரின் விவரமாக சரி பார்த்து குறித்து வந்தனர். இனிமேல், அந்த காகிதங்கள் தேவைப்படாது, என்றனர்.