districts

img

சர்வதேச மனித உரிமை நாள் கருத்தரங்கம்

கோவை, டிச.11- சர்வதேச மனித உரிமை நாள் கருத் தரங்கம் பேரா. சாய்பாபா நினைவேந் தல் குழு சார்பில் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத் தில் செவ்வாயன்று நடைபெற்றது.  

மக்கள் கலை இலக்கிய கழகம் பாட கர் கோவன் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய கருத்தரங்கிற்கு அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி குமார் தலைமை வகித்தார். பொதுநல மாணவர் எழுச்சி  இயக்க பொறுப்பாளர் அருண் வரவேற் றார்.

இக்கருத்தரங்கில், மக்கள் கண்கா ணிப்பகம் சார்பில் ஹென்றிடிபேன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தலை வர் தியாகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் சுப்ரமணியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பேரா சிரியர் சுந்தரவள்ளி, ஜஏஏசி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் வழக்கறிஞர் நந்தகுமார், மக்கள் அதிகாரம் சார்பில் மாறன், ஆந்திர மாநில சமூக செயற் பாட்டாளர் ரவி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  

முன்னதாக, ‘’என்னைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?’’ என்ற பேரா. சாய் பாபா எழுதி வழக்கறிஞர் கே.சுப்பிர மணியன் மற்றும் கவிஞர் காமு ஆகி யோர் தமிழில் மொழிபெயர்த்த புத்தக வெளியீடு நடைபெற்றது. நூலை பேரா சிரியர் சாய்பாபா அவர்களது மகள் மஞ் சிரா வெளியிட தந்தை பெரியார் திரா விடர் கழகம் பொதுச் செயலாளர் கு.ராம கிருட்டிணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. எஸ்.கனகராஜ், மக்கள் சிவில் உரி மைக் கழகம் சேகர் அண்ணாதுரை ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். முடிவில், தமிழ்நாடு திராவிட சுயமரியாதை இயக்க பொறுப்பாளர் நேரு தாஸ் நன்றி கூறினார்.