நீலகிரி, டிச.26- உதகையில் இருந்து தொட்டபெட்டா காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிக ளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தொட்ட பெட்டா போன்று சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பெரும்பா லான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்வது வழக்கம். இந் நிலையில், கொரோனா பாதிப்பு காரண மாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு மூடப்பட்டன. அப்போது தொட்டபெட்டா காட்சி முனையும் மூடப்பட்டது. இங்கு செல்ல சுற்றுலா பயணி கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலை யில், கடந்த ஆகஸ்ட் மாதம் உதகையில் பெய்த கனமழையின் காரணமாக தொட்ட பெட்டா காட்சிமுனைக்கு செல்லும் சாலை யில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலை யில் இருந்த சிறிய பாலம் ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், சாலை பழுதடைந்தது. இச்சாலையில் வாகனங் கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உதகையில் உள்ள சுற் றுலா தலங்கள் திறக்கப்பட்ட போதிலும், சாலை பழுது காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிக ளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஓராண்டிற்கு மேலாக தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், இச்சாலையை சீர மைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தி வந்த நிலையில், சாலை யில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க ரூ.15 லட் சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை சீர மைப்பு பணிகள் கடந்த மாதம் முதல் நடை பெற்று வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட் களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜனவரி மாதத்திற்குள் பாலம் கட் டும் பணியை முடிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதால், பொங்கல் விடுமு றைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்ட பெட்டா செல்ல அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.