நாமக்கல், ஜன.29- அரசு ஊழியர் குடும்பத்திற்கு வழங்கப் பட்ட இலவச பட்டாவை ரத்து செய்து, பொது பயன்பாட்டிற்குவிட வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம் கிராமம், சின்ன எலச்சிபாளையத்தில் 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியி லுள்ள முருகன் கோவில் வடக்கு பகுதியில், அரசு புறம்போக்கு நிலம் இரண்டு சென்ட் உள் ளது. இதில் கான்கிரீட்டால் போடப்பட்ட சாலை கடந்த 40 வருடமாக இருந்து வருகி றது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றி வைத்து கொடிக்கம்பம் போடப்பட்டுள்ளது. இந்த இடத்தை அரசு ஊழியராக பணிபுரிந்து வருபவருக்கு, ஊர் பொதுமக்களுக்கு தெரியாமல் முறை யான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இல வச பட்டாவை வருவாய்த்துறையினர் வழங் கியுள்ளனர். எனவே, இந்த பட்டாவை ரத்து செய்து பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியு றுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் லதா தலைமையில், ஊர் தர்மகர்த்தா தங்கவேல், துணைத்தலைவர் விஜயா, சிபிஎம் ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ் உட்பட பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.