தருமபுரி, மே 21- குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன் றிய தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். துணைத்தலைவர். பழனி யம்மாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய துணைத்தலை வர் எம்.டி.விஜயன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி துவக்கவுரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ஜெயா, ஒன்றிய பொரு ளாளர் வசந்தா ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.சங்கர், சத்துணவு ஊழி யர் சங்க ஓய்வுபெற்றோர் அமைப் பின் மாவட்ட பொருளாளர் மதலை முத்து ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி, பொரு ளாளர் வளர்மதி, தருமபுரி ஒன்றிய தலைவர் (பொ) ஜெயந்தி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், 30 ஆண்டு கால மாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய தலைவராக துரை, செயலாளராக வளர்மதி, பொரு ளாளராக பழணியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஜாக்டோ - ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் கே.புகழேந்தி நிறைவுரை யாற்றினார். மலர்கொடி நன்றி கூறி னார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.