நாமக்கல், ஜூன் 28- மானிய விலையில் பெட் ரோல், டீசல் வழங்க வேண் டும் என ஆட்டோ தொழிலா ளர்கள் வலியுறுத்தியுள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம், வெப்படையி லுள்ள சிஐடியு அலுவலகத்தில், நேதாஜி பயணிகள் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க மகா சபை கூட்டம், சங்கத்தின் கிளைத் தலைவர் வி.பி.சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் தனபால், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் தண்டபாணி ஆகி யோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில், வெப் படை பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழிலா ளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலை யில், வெப்படை பேருந்து நிறுத்த பகுதி அருகே, கழிப்பிட வசதி இல்லாததால் பல ரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நவீன கழிப்பிட கட்டிடம் வசதி செய்து தர வேண்டும். ஆட்டோவிற்கு மானியத்துடன் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக எஸ்.தனபால், துணைத்தலைவராக வி.பி. சுப்பிரமணி, செயலாளராக மெய்யநாதன், துணைச்செயலாளராக மயில் சுப்பிரமணி, பொருளாளராக பிரபு ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.