திருப்பூர், பிப்.21- திருப்பூர் மாவட் டத்திற்கு மோடி வருகிறார் என்று குடுகுடுப்புகாரர் போல் பாஜகவினர், சொல்லி வந்தனர். பல முறை தேதி தள்ளிபோய் ஒரு வழியாக வரும் பிப்.27 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார் என்று தெரிவித்தனர். இதை யொட்டி புதனன்று கலைஞர் கருணா நிதி மத்திய பேருந்து நிலையத்தில் பாஜவினர் ரோபோ மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்போவதாக தெரி வித்திருந்தனர். ஆனால் ரோபா தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை. இதைப் பார்த்த அங்கு இருந்த மக்கள் இவர் களை போலவே இவர்கள் வாடகைக்கு எடுத்து வந்த ரோபோவும் வேலை செய்யவில்லை என்று கூறி சிரித்து சென்றதால், பாஜகவினர் சோகத்துடன் செயல் படாத ரோபோவை தூக்கி சென்றனர்.