அருண்பிரகாஷ், உடுமலை.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்பார்த்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களில் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு இல்லை. புதிய கடன்க ளுக்கான நிதி ஒதுக்கீ டும் இல்லை. தில்லி விவ சாயிகளின் போராட்டத்தின் முக்கிய கோரிக் கையான குறைந்தபட்ச ஆதார விலைக்கான அறிவிப்பும் இல்லை. தங்கத்திற்கு வரி குறைப்பு; ஆனால், உரங்களுக்கு மானியம் ஒன்றுமில்லை. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமாகும். வெளிநாட்டில் இருந்து பாமாயிலை வரி சலுகையோடு இறக்குமதி செய்யும் ஒன்றிய அரசு, தென்னை உட்பட இந்திய நாட்டில் விளையும் எண்ணெய் வித்துக்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவில்லை. நாடு முழுவதும் உள்ள கரும்பு சர்க்கரை ஆலைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் கரும்பு ஆலைகளை ஒவ்வொன்றாக மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு நிதி ஒதுக் காதது கண்டனத்திற்குரியது. விவசாயத்திற்கு ஒதுக்கியுள்ள ரூ.1.52 லட்சம் கோடி என்பது போதுமானதாக இல்லை. நாட்டில் நான் கிற்கு மூன்று பேர் வேளாண்மை தொழில் சார்ந்து உள்ளனர். அப்படியான ஒரு நிலை யில் வேளாண்மைக்கு ஒதுக்கியுள்ள நிதி போதுமானது என்று எப்படி தோன்றும். வேளாண் துறையில் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குவதற்கான திட்டமும் இல்லாமல் உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட் டிற்கும், ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதுதான் ஒன்றிய அரசின் பட்ஜெட்.
ஆர்.குமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்.
ஒன்றிய அரசு தாக் கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை விவ சாயிகளுக்கு உதவா தது. விவசாய சங்கத் தினர் கோரியபடி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையாக சி2+50 என்ற சூத்திரப்படி, கட்டுப்படியான விலை கிடைக்க எந்த உருப்படியான நடவ டிக்கையும் இல்லை. மேலும், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கூடுதலாக உற்பத்தி யாகும் நேரத்தில் விளைப் பொருளை பாது காத்து, விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க எந்த உருப்படியான திட்டமும் இல்லை. மொத்தத்தில் விவசாயிகளுக்கு பயன் தராத நிதி நிலை அறிக்கை! மோடி அரசின் வெறும் சொல்லாடலே!
வி.கே.சிவக்குமார், வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்.
வட்டி மானியத் திட் டம், நகர்ப்புற வீட்டு வசதிக்கான வட்டி மானியத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப் படுத்தியுள்ளது. இது வீட்டுக்கடன்களை மிக வும் மலிவாக மக்க ளுக்கு வாங்க உதவுகி றது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி கூடுதல் வீடுகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2.2 லட்சம் கோடி ஒன்றிய அரசு உதவித்தொகை ஒதுக் கீடு செய்யப்பட உள்ளது. மேலும், வாடகை வீடு, தொழில்துறை, தொழிலாளர்களுக்கு வாடகை வீட்டு ஆதரவை உருவாக்கும் திட் டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது வர வேற்கப்பட வேண்டியதாகும். முத்திரைத் தீர் வைக் குறைப்பு, பெண்களின் பெயரில் சொத்து வாங்குபவர்களுக்கு குறைந்த கட்டணங்கள் உட்பட, வீட்டுக்கடன் வாங்குபவர்களை ஈர்க் கவும் முத்திரைக் கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. சொத்துத் தரவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது, வீடு வாங்கு பவர்களையும், சொத்துத் தகவல்களை அணு குவதையும், சரிபார்ப்பதையும் எளிதாக்கு கிறது.
எம்.பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை யில் மத்திய அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரி யர்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இடம் பெறவில்லை. குறிப்பாக, சமூகப் பாது காப்பாக இருக்கக் கூடிய புதிய பென்சன் திட்டம் ரத்து, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த் துவது, ஒப்பந்தப் பணி நியமனம் ரத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 8 ஆவது ஊதியக்குழு அமைக்காதது மேலும் பட்ஜெட் டில் ஒட்டுமொத்தமாக தமிழகம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறை களில் தனியார் பங்களிப்புடன் கூடிய வெளி முகமை (அவுட்சோர்சிங்) ஆள் எடுக்கும் பணி யினை கைவிட்டு. நிரந்தரப் பணியிடங்கள் கால முறை ஊதியத்தில் நியமனத்திற்கு வழி வகுக் கும் எந்த ஒரு முகாந்திரம் இல்லை. ஒன்றிய பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு எதிரான அணுகுமுறைக்கும், மக்கள் விரோத கொள் கைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் ஒன்றிய அரசின் செயலுக்கும் கண்டனம் எழுப்பிட வேண்டும்.
விஸ்வநாதன், போக்குவத்து தொழிலாளி.
ஒன்றிய மோடி அர சின் பட்ஜெட் என்பது, மீண்டும் மக்கள் நலனை புறக்கணித்து, கார்ப்பரேட் ஆதரவு அரசு என்பதை மீண் டும் நிருபித்துள்ளது. மேலும், தொழிலாளர் களின் நலனை பாது காக்க எந்த அறிவிப்பு இல்லை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வேலையின்மை விகிதத்தை குறைப்பதற்கான எந்த அறிவிப் புகள் இல்லை. மாறாக, வருமான வரி என்ற பெயரில் நடுத்தர மக்களை மற்றும் ஊழியர் களை சுரண்டும் விதமாக உள்ளது. புதிய வரு மான வரி திட்டத்தை திணிக்கும் நடவடிக்கை யாக உள்ளது.