districts

img

அதிகாரத்தை நிலைநாட்ட பெண்களின் உடல் மீது அநீதி இழைக்கப்படுகிறது

ஈரோடு, அக்.15- தங்களது அதிகாரத்தை நிலைநாட்ட பெண்களின் உடல் மீது அநீதி இழைக் கப்படுகிறது என காப்பீட்டு கழக ஊழி யர் சங்க தேசிய இணைச்செயலாளர் எம்.கிரிஜா குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரோட்டில் வெள்ளியன்று நடை பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, “மரபுகளை மறுத்த பாராளுமன்றம்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசு கையில், குடியரசு தலைவராக இருந்த  ராம்நாத் கோவிந்த் மற்றும் தற்போ துள்ள குடியரசு தலைவர் திரௌபதி  முர்மு ஆகியோரை கோவிலுக்குள்ளே விடவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பத வியில் இருப்பவர்களைக் கூட மதம், சாதி பிரச்சனைகளை சொல்லி அவர்க ளின் உரிமையை இவர்கள் (சனாதனி கள்) மறுக்கின்றனர். தாங்கள் நினைக் கின்ற சட்டங்களை நிறைவேற்ற ஏதோ ஒரு காரணத்தை சொல்லி, ராஜ்ய சபா உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்து விட்டு, விவாதமின்றி சட்டங்களை நிறைவேற் றுகின்றனர். தில்லியில் நடைபெற்ற விவ சாயிகளின் போராட்டத்தை உலகிற்கு தெரிவித்த பத்திரிக்கைகளை அமலாக் கத்துறையை ஏவிவிட்டு, ஒன்றிய அரசு பழிவாங்குகிறது. பத்திரிக்கையாளர் கள் மீது உபா சட்டம் பிரயோகப்படுத்து கிறது. அந்த சட்டத்தை எதிர்த்து நாங் கள் எதிர்த்து வாக்களித்தோம். சீனாவிடமிருந்து நிதி பெற்ற அத் தனை பேரையும் தூக்கில் போட வேண் டும் என்றால், இவர்களைத் (பாஜக)  தான் முதலில் தூக்கில் போட வேண்டும். பலநூறு கோடி ரூபாய் சீன கம்பெனி யிலிருந்து பிஎம் கேர்-க்கு பணம் வந் துள்ளது. அப்படியெனில் இவர் தான்  முதலில் கைது செய்யப்பட வேண்டும். மணிப்பூர் பிரச்சாரத்திற்குச் சென்ற பிர தமர் “டபுள் என்ஜின் ஆட்சி” நடைபெற பாஜகவிற்கு வாக்கு கேட்டார். ஆனால், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கலவ ரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க இன்று வரை பிரதமர் போக வில்லை. பிரதமரை அவைக்கு வந்து  மணிப்பூரை பற்றி பேச வைக்க, நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந் தோம். அவர் தனது புளூகு மூட்டை களை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மணிப்பூர் பற்றி 4 நிமிடங்கள் பேசினார். தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கம் இருக்கிறது. அர சாங்க அதிகாரிகளை இடமாற்றம் செய் யும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு இல்லை என்கின்றனர். நீதிமன்றத்திற் குச் சென்ற நிலையில் நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்வு செய்யப்பட்ட மாநில அரசாங்கத்திற்கு அதிகாரி களை மாற்றும் அதிகாரம் இருக்கிறது  என்றது. உடனே ஜனாதிபதியை வைத்து மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை, கவர்னருக்குத் தான் அதி காரம் இருக்கிறது என உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவசர சட்டம் கொண்டு வந்தனர். இதன் மூலம் இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் சொன்னதற்கு மாறாக அதற்கு நேர் எதிராக செயல்படுவோம் என்கின்றனர். நாடாளுமன்ற ஜனநாய கம் மதிக்கப்படுவதில்லை. அனைத்து சட்டங்களையும், மெஜாரிட்டி என்ற  பெயரில் விவாதமின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு  எதிராக தீர்ப்பு கூறும் உச்சநீதிமன்றம் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை  முடக்குகின்ற செயலில், தங்கள் கையில் இருக்கும் அனைத்து அதிகார அமைப்பு களையும் தவறான முறையில் பயன் படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றம்,  சட்டமன்றம் போன்ற ஜனநாயக அமைப் புகளின் உரிமைகளை பறிப்பது என்பது நடந்து கொண்டிருக்கிறது.  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல்  என்பவர்கள் ஒரே சாதி என்று அறிவிப் பார்களா? அந்த தைரியம் அவர்க ளுக்கு இல்லை. ஏனென்றால் மோதலை  உருவாக்க வேண்டும் என்றால் சாதி,  மதம் வேண்டும். இந்திய வரலாற்றில் நாட்டின் இன்றைய ஒன்றிய ஆளுங் கட்சியில் சிறுபான்மை மக்களின் பிரதி நிதி ஒருவர் கூட இல்லை. 20 சதவிகித மக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் வைத்திருக்கின்றனர். எனவே சட்டமன்றம், நாடாளுமன்றம் உட்பட இந்த தேசத்தின் அனைத்து நட வடிக்கைகளையும் கூர்ந்து கவனிப்ப தும், ஜனநாயக ரீதியான முடிவை தேர்ந் தெடுக்கின்ற மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இவ்வாறு பி.ஆர். நடராஜன் எம்.பி., பேசினார். பெண்ணியமும், அரசியல் சூழலும் இதைத்தொடர்ந்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தேசிய இணைச் செயலாளர் எம்.கிரிஜா, “பெண்ணிய மும் இன்றைய சூழலியலும்” என்ற  தலைப்பில் பேசுகையில், ஆங்கிலேயரி டத்தில் இந்த தேசம் அடிமைப்பட்டி ருந்த போது அவர்களை எதிர்த்த போராட் டத்தில் கணிசமான பெண்களும் இடம் பெற்றனர்.

பலர் இன்னுயிரை ஈந்தனர்.  சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமை களும் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தனர். இந்திய அரசியல் சாசனமும் அதற்கு உறுதி கூறியது. ஆனால், நடைமுறையில் இன் றைய இந்தியாவில் பெண்கள் நிலை வெட்கக்கேடாக இருக்கிறது. பெண்க ளைப் பற்றி பேசுவது என்றால் மணிப் பூரை பேசாமல் கடந்து செல்ல முடி யாது. எந்த போராக, மோதலாக இருந் தாலும் தங்களது அதிகாரத்தை நிலை நாட்ட பெண்ணின் உடல் மீது அநீதி இழைக்கப்படுகின்றது. இந்த அவலம் இன்னும் நீடிக்கிறது. அதன் வெளிப் பாடுதான் மணிப்பூரிலும் நடந்தது. இந் தியாவின் மகள்கள் என்பார் பிரதமர். ஆனால், மணிப்பூர் பெண்களைப் பற்றி பேச அவருக்கு 72 நாட்களானது. உழைப்பு சுரண்டலில் கூடுதலாகப் பாதிக்கப்படுபவர்களாக பெண்கள் இருக் கிறார்கள். எந்த குற்ற உணர்ச்சியும் இல் லாத சமூகமாக உள்ளது. கண்ணிய மான வாழ்க்கை நடத்த வேண்டும் என் றால் சமூகத்தில் புரையோடிப் போயி ருக்கும் ஆணாதிக்க சிந்தனை களையப் பட வேண்டும். அதிகாரத்தில் 9 ஆண்டு கள் இருப்பவர்கள் தேர்தலை மனதில் கொண்டு 33 சதவிகித இட ஒதுக்கீடு  சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார் கள். அது தேதி எழுதப்படாத காசோலை யாக உள்ளது. கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக் கூடிய, உழைப்பாளி மக்க ளில் பெரும்பகுதியினரான பெண்க ளின் முன்னாள் உள்ள கடமை நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.  அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவ னிக்க வேண்டும், என்றார்.