districts

2 ஆம் நிலை காவலர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

சேலம், ஜூன் 4- மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 2 ஆம் நிலை காவலர் களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் 2 ஆம் நிலை காவ லர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் வகுப்பு கள் தொடங்கியது. இப்பயிற்சி வகுப் பினை தமிழ்நாடு காவல்துறை  இயக்குநர் சைலேந்திரபாபு சென்னை யிலிருந்து காணொளி காட்சி மூல மாக தொடங்கி வைத்தார். அப்போது  அவர் பேசுகையில், பயிற்சி வகுப் பிற்கு வந்துள்ள அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந் துள்ளீர்கள். பயிற்சி பள்ளியில் அளிக்கப்படும் கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சி களையும் சிறப்பாக கற்றுக் கொள்ள  வேண்டும். காவல் துறையில் சேர்ந்த  பிறகு இதே பணியில் இல்லாமல் தொடர்ந்து படித்து உதவி ஆய்வா ளர், துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளுக்கு தேர்ச்சி பெற வேண்டும். பொதுமக்களிடம் அன்போடு பழக வேண்டும். காவல் நிலையங்களில் பணிபுரியும் போது புகார் தரும் பொதுமக்களிடம் பணி வுடன் நடந்து கொள்ள வேண்டும், என்றார். இப்பயிற்சி வகுப்பில் தருமபுரி, மயிலாடுதுறை, தூத்துக்குடி, தஞ்சா வூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 21  மாவட்டங்களில் இருந்து ஆண்  பயிற்சி காவலர்கள் கலந்து கொண்ட னர். பயிற்சி காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியாக கவாத்து பயிற்சி, சட்ட வகுப்பு, துப்பாக்கி சுடும் பயிற்சி, ஒழுக்கம், பொதுமக்களிடம் அணுகுமுறை பற்றிய வகுப்புகள் நடத்தப்படும். இந்நிகழ்வில் மேட்டூர் காவல் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் நாக ராஜன், ஆய்வாளர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.